ETV Bharat / state

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு!

author img

By

Published : Feb 28, 2023, 2:15 PM IST

திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில், அவரது தம்பியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு!
முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் தம்பிக்கு ஜாமீன் மறுப்பு!

சென்னை: திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான், கடந்த 2022 டிசம்பர் 22ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவம் நடந்த அன்று, அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, அவர்களிடம் செல்போன் உரையாடல் குறித்தும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உயிரிழந்த முன்னாள் எம்பி மஸ்தானின் தம்பியான கவுஸ் ஆதம் பாஷாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்னையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், 5 லட்சம் ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை (மஸ்தான்) கொன்றதாக காவல் துறையினரிடம் மஸ்தானின் தம்பி வாக்குமூலம் அளித்தார்.

மேலும், கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கவுஸ் ஆதம் பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கவுஸ் ஆதம் பாஷா, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (பிப்.28) நீதிபதி தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயிரிழந்த மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டாக்டர் மஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தடய அறிவியல் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. குடும்ப பிரச்னைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பான தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கவுஸ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் எம்.பி. மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. திட்டம்தீட்டி கொலை செய்தது அம்பலம்

சென்னை: திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான், கடந்த 2022 டிசம்பர் 22ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவம் நடந்த அன்று, அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், மஸ்தான் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, அவர்களிடம் செல்போன் உரையாடல் குறித்தும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உயிரிழந்த முன்னாள் எம்பி மஸ்தானின் தம்பியான கவுஸ் ஆதம் பாஷாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்னையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், 5 லட்சம் ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை (மஸ்தான்) கொன்றதாக காவல் துறையினரிடம் மஸ்தானின் தம்பி வாக்குமூலம் அளித்தார்.

மேலும், கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கவுஸ் ஆதம் பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கவுஸ் ஆதம் பாஷா, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (பிப்.28) நீதிபதி தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயிரிழந்த மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டாக்டர் மஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தடய அறிவியல் துறை அறிக்கை தெரிவித்துள்ளது. குடும்ப பிரச்னைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பான தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கவுஸ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் எம்.பி. மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. திட்டம்தீட்டி கொலை செய்தது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.