ETV Bharat / state

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்

author img

By

Published : Nov 15, 2022, 8:36 AM IST

Updated : Nov 15, 2022, 11:54 AM IST

கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.10 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு வலது கால் மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8 ஆம் தேதி உள் நோயாளியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மூட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், ரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று (நவ. 15) காலை 7:15 மணியளவில் பிரியா உயிரிழந்தார்.

பிரியா
பிரியா

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரியா உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்திவிட்டு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரியாவுக்கு, அந்த மருத்துவமனையில் உள்ள ஆர்த்தோ ஸ்கோபி என்கின்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மூட்டு சவ்வு சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இருந்தாலும் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு Compression Bandage மிக இருக்கமாக கட்டப்பட்டது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்களெல்லாம் பழுதாகி அவதிக்குள்ளாகியிருக்கிறார். நவம்பர் 7 ஆம் தேதி வரை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவ வல்லுநர்கள் மூலம் மிக உண்ணிப்பாக அந்த மாணவி கவனிக்கப்பட்டு வந்தார்.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நான் கேட்டறிந்தேன். தொடர்ச்சியாக எலும்பு சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகள் அளித்து வந்தனர். சிறுநீரக பாதிப்பு, ரத்த ஓட்ட பாதிப்பு அந்த மாணவிக்கு ஏற்பட்டது. இன்று காலை 7.15 மணிக்கு அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது மிகப்பெரிய இழப்பாகும். உயர் மட்டக்குழு விசாரணையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் இதற்கு காரணம் என்று தெரியவந்தது.

அந்த மாணவி சரியானவுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் Battary கால்களை வாங்கித்தர அறிவுறுத்தியிருந்தோம். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தநிலையில் இன்று அவர் உயிரிழந்தது மிகப்பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று அந்த பெண் குழந்தையின் சகோதரர்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்திரவாதம் வழங்கலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குழம்பில் கரப்பான் பூச்சி: டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணை

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு வலது கால் மூட்டு சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8 ஆம் தேதி உள் நோயாளியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வலது காலில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மூட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில், ரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று (நவ. 15) காலை 7:15 மணியளவில் பிரியா உயிரிழந்தார்.

பிரியா
பிரியா

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரியா உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்திவிட்டு அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரியாவுக்கு, அந்த மருத்துவமனையில் உள்ள ஆர்த்தோ ஸ்கோபி என்கின்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மூட்டு சவ்வு சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இருந்தாலும் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு Compression Bandage மிக இருக்கமாக கட்டப்பட்டது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்களெல்லாம் பழுதாகி அவதிக்குள்ளாகியிருக்கிறார். நவம்பர் 7 ஆம் தேதி வரை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நவம்பர் 8 ஆம் தேதி அன்று இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த மருத்துவமனையில் அனைத்து துறை மருத்துவ வல்லுநர்கள் மூலம் மிக உண்ணிப்பாக அந்த மாணவி கவனிக்கப்பட்டு வந்தார்.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நான் கேட்டறிந்தேன். தொடர்ச்சியாக எலும்பு சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சைகள் அளித்து வந்தனர். சிறுநீரக பாதிப்பு, ரத்த ஓட்ட பாதிப்பு அந்த மாணவிக்கு ஏற்பட்டது. இன்று காலை 7.15 மணிக்கு அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது மிகப்பெரிய இழப்பாகும். உயர் மட்டக்குழு விசாரணையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவும் இதற்கு காரணம் என்று தெரியவந்தது.

அந்த மாணவி சரியானவுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் Battary கால்களை வாங்கித்தர அறிவுறுத்தியிருந்தோம். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தநிலையில் இன்று அவர் உயிரிழந்தது மிகப்பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று அந்த பெண் குழந்தையின் சகோதரர்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்திரவாதம் வழங்கலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குழம்பில் கரப்பான் பூச்சி: டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் விசாரணை

Last Updated : Nov 15, 2022, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.