ETV Bharat / state

ஏரியில் சடலமாக மிதந்த மீனவர்

author img

By

Published : Nov 22, 2020, 11:10 AM IST

கொரட்டூர் ஏரியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது சேற்றில் சிக்கி மீன்பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Fisherman floating corpse in korattur lake
Fisherman floating corpse in korattur lake

சென்னை: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், அக்கரகாரம் கோபாலகிருஷ்ணன் நகர், பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் ஏரியில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை சுரேஷ் வழக்கம்போல் கொரட்டூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருந்த போதிலும், அவரைக் குறிக்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு கொரட்டூர் ஏரியில் சுரேஷ் சடலமாக மிதந்து கொண்டிருந்ததாக வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் ஏரியில் இறங்கி சடலத்தை மீட்டனர்.

இதன்பிறகு தகவல் அறிந்த கொரட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுரேஷ் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: சாக்கடை ஓடையில் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

சென்னை: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், அக்கரகாரம் கோபாலகிருஷ்ணன் நகர், பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் ஏரியில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை சுரேஷ் வழக்கம்போல் கொரட்டூர் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருந்த போதிலும், அவரைக் குறிக்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு கொரட்டூர் ஏரியில் சுரேஷ் சடலமாக மிதந்து கொண்டிருந்ததாக வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் ஏரியில் இறங்கி சடலத்தை மீட்டனர்.

இதன்பிறகு தகவல் அறிந்த கொரட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுரேஷ் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: சாக்கடை ஓடையில் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.