ETV Bharat / state

29 பயணிகளுடன் சென்னை வந்தடைந்த முதல் விமானம்

சென்னை: 61 நாள்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் விமானம் 29 பயணிகளுடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

author img

By

Published : May 25, 2020, 11:28 AM IST

Updated : May 25, 2020, 12:29 PM IST

சென்னை விமானநிலையம்
சென்னை விமானநிலையம்

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து மத்திய அரசு மே 25ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் நிபந்தனைகளுடன் தொடங்கலாமென அறிவித்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், விமான சேவைகளை தொடங்க கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் தமிழ்நாட்டில் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட இருந்தது. ஆனால், அந்த விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதனால் முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 6.35 மணிக்கு புறப்பட்டது.

அதேபோல இன்று காலை டெல்லியிலிருந்து முதல் விமானம் 29 பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது. அதையடுத்து அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின் 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கிடையில், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேரில் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து மத்திய அரசு மே 25ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் நிபந்தனைகளுடன் தொடங்கலாமென அறிவித்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், விமான சேவைகளை தொடங்க கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் தமிழ்நாட்டில் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட இருந்தது. ஆனால், அந்த விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதனால் முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 6.35 மணிக்கு புறப்பட்டது.

அதேபோல இன்று காலை டெல்லியிலிருந்து முதல் விமானம் 29 பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது. அதையடுத்து அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின் 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கிடையில், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேரில் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

Last Updated : May 25, 2020, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.