ETV Bharat / state

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை்; போக்சோவில் தந்தை கைது!

author img

By

Published : Sep 9, 2020, 2:57 PM IST

சென்னை: அயனாவரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் (45) என்பவருடன் திருமணம் நடைபெற்று. இந்த தம்பதியினருக்கு 16 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் செந்தில் குமார் பல மாதங்களாக தனது பிள்ளைகளின் முன்பே நிர்வாணமாக ஆடையை மாற்றி வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி சாந்தி தனது கணவரான செந்தில்குமாரை பல முறை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு செந்தில்குமார் தனது 8 வயதான இளைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு முத்தமிட்டுள்ளார்.
இதனை அவர் தனது தாயிடம் அச்சிறுமி நேற்று (செப்.08) தெரிவித்தார். அதன் பின்னர் சாந்தி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்தில் குமார் மீது புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலில் கிடைத்தப் பணத்தைப் ப‌ங்குபோடுவதில் தகராறு: 3 பேர் கைது!

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருபவர் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் (45) என்பவருடன் திருமணம் நடைபெற்று. இந்த தம்பதியினருக்கு 16 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் செந்தில் குமார் பல மாதங்களாக தனது பிள்ளைகளின் முன்பே நிர்வாணமாக ஆடையை மாற்றி வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி சாந்தி தனது கணவரான செந்தில்குமாரை பல முறை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு செந்தில்குமார் தனது 8 வயதான இளைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு முத்தமிட்டுள்ளார்.
இதனை அவர் தனது தாயிடம் அச்சிறுமி நேற்று (செப்.08) தெரிவித்தார். அதன் பின்னர் சாந்தி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்தில் குமார் மீது புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலில் கிடைத்தப் பணத்தைப் ப‌ங்குபோடுவதில் தகராறு: 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.