ETV Bharat / state

கிண்டி அருகே சுவரொட்டியால் சிக்கிய பிரபல ரவுடி திருவேங்கடம்!

author img

By

Published : Aug 22, 2020, 1:57 AM IST

சென்னை: கிண்டி அருகே திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பிரபல ரவுடி திருவேங்கடத்தை கைது செய்த காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Famous Rowdy Thiruvenkadam trapped by a poster near Kindi!
Famous Rowdy Thiruvenkadam trapped by a poster near Kindi!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 21) சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பிரபல ரவுடி திருவேங்கடம் கிண்டி வந்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிக்காக தெரு முழுவதும் திருவேங்கடத்தின் பெயர் பொறித்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டும் இருந்துள்ளன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி காவல்துறையினர், ரவுடி திருவேங்கடத்தை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது ரவுடி காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

பின்னர் திருவேங்கடத்தை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி) அவதூறாக பேசி மிரட்டுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:1980க்கு பின் தமிழ்நாட்டில் நடந்த என்கவுன்ட்டர்களின் விவரம்...!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 21) சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பிரபல ரவுடி திருவேங்கடம் கிண்டி வந்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிக்காக தெரு முழுவதும் திருவேங்கடத்தின் பெயர் பொறித்த சுவரொட்டிகள் ஓட்டப்பட்டும் இருந்துள்ளன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி காவல்துறையினர், ரவுடி திருவேங்கடத்தை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது ரவுடி காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

பின்னர் திருவேங்கடத்தை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி) அவதூறாக பேசி மிரட்டுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506(1) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:1980க்கு பின் தமிழ்நாட்டில் நடந்த என்கவுன்ட்டர்களின் விவரம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.