ETV Bharat / state

எஸ்றா சற்குணம் மீது அவதூறு வழக்கு!

author img

By

Published : May 6, 2019, 2:25 PM IST

சென்னை: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் எஸ்றா சற்குணம் பேசியதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

File pic

பொன்பரப்பி கலவரத்தைக் கண்டித்து ஏப்ரல் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட எஸ்றா சற்குணம் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் கொச்சைப்படுத்தி பேசியதாக பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் பாமக குறித்து தவறாக பேசிய எஸ்றா சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மே 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பொன்பரப்பி கலவரத்தைக் கண்டித்து ஏப்ரல் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட எஸ்றா சற்குணம் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் கொச்சைப்படுத்தி பேசியதாக பாமக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் பாமக குறித்து தவறாக பேசிய எஸ்றா சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மே 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Intro:Body:

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசிய எஸ்றா சற்குணம் மீது பாமக சார்பில் எழுப்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.



பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எஸ்றா சற்குணம் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களையும் கொச்சைபடுத்தி பேசியதாக பாமக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.



இந்நிலையில் பாமக குறித்து தவறாக பேசிய எஸ்றா சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.



இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.



 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.