ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு - தீர்ப்பு வழங்க இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Sep 20, 2021, 7:38 PM IST

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்குத் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

rajendra balaji
rajendra balaji

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில், புகார் ஒன்றை தெரிவித்தார்.

அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும் நகராட்சித் தலைவராக இருந்தபோதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினர்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பு இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்தனர். இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தும், ஆனால் வழக்கு குறித்தான விசாரணையைத் தொடரலாம் எனவும்; ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்துக்குவிப்பு'

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில், புகார் ஒன்றை தெரிவித்தார்.

அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும் நகராட்சித் தலைவராக இருந்தபோதும் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினர்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பு இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்தனர். இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தும், ஆனால் வழக்கு குறித்தான விசாரணையைத் தொடரலாம் எனவும்; ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்துக்குவிப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.