ETV Bharat / state

கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் வீட்டில் திருடப்பட்ட நகைகள் பறிமுதல்! - murder case

திருநெல்வேலி: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியிடமிருந்து 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

karthikeyan
author img

By

Published : Jul 30, 2019, 10:41 AM IST

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத்தின் காரணமாக உமா மகேஸ்வரியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலை குற்றவாளியான கார்த்திகேயன் திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் ஆவார். இந்நிலையில் கொலை நடந்த வீட்டிலிருந்து திருடப்பட்ட 25 சவரன் தங்க நகைகளை கார்த்திகேயனிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து கத்தி, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் கே.கே. திரிபாதி நேற்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிபிசிஐடி அலுவலராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு இன்று காலை நெல்லையில் விசாரணையை தொடங்கவுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், முன்விரோதத்தின் காரணமாக உமா மகேஸ்வரியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கொலை குற்றவாளியான கார்த்திகேயன் திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் ஆவார். இந்நிலையில் கொலை நடந்த வீட்டிலிருந்து திருடப்பட்ட 25 சவரன் தங்க நகைகளை கார்த்திகேயனிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து கத்தி, ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் கே.கே. திரிபாதி நேற்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிபிசிஐடி அலுவலராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு இன்று காலை நெல்லையில் விசாரணையை தொடங்கவுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Intro:முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வாய்ப்பு. கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தின்படி 25 சவரன் நகைகள் பறிமுதல், மேலும் இருவரிடம் தீவிர விசாரணை.Body:

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணி பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ம் தேதி மதியம் மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து 3 தனி படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் முதலில் ஆதாய கொலை என்ற கோணத்திலும் பின்னர் சொத்துபிரச்சனை,அரசியல் ரீதியான கொலை,தேர்தலில் சீட் வாங்கி தருவதில் பணமோசடியால் நடைபெற்ற கொலை என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஒரு துப்பு கூட கிடைக்காமல் மதுரையில் உள்ள திமுக பிரமுகர் சீனியம்மாள், உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காவல்துறைக்கு கொலை வழக்கு தொடர்பாக சிறிய முன்னேற்றம் கூட கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கிடமான ஸ்கார்பியோ கார் அந்த பகுதியில் நின்றது கண்டறியபட்டது. மேலும் ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணபட்டது .கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில் அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து கார்த்திகேயனை காவல்துறையினர் பிடித்து பாளையங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் விசாரணை நடத்தினர். இதில் தான் குற்றவாளி என ஒத்து கொண்டதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட இரு முறை 50 லட்சம் வரை பணம் கொடுத்து சீட் கிடைக்காத விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாகவே முதல் கட்ட தகவல்கள் வெளியாகியது. இதனை தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் கொலையை செய்ய கூலிப்படை பயன் படுத்த பட்டார்கள் என தெரியவந்தது மேலும் கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தின்படி 25 சவரன் நகைகள் மற்றும் கொலை செய்ய பயன் படுத்திய கத்திகள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) கே.கே. திரிபாதி நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரியாக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டு இன்று காலை நெல்லையில் விசாரணையை தொடங்க உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.