ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

author img

By

Published : May 29, 2020, 10:01 AM IST

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10
etv-bharat-top10-news-10

சென்னையில் இன்று 47 விமான சேவைகள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் இன்று 47 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

53 நாள்களுக்குப் பின் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 53 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை, நேற்று மீண்டும் தொடங்கியது.

மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள துணிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அனைத்து குடிபெயர்ந்த தொழிலாளர்களும் வீடு செல்லும் வரை நாங்கள் கடுமையாக உழைப்போம்- மத்திய அரசு

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளிகள் அனைவரும் வீடு செல்லும் வரை நாங்கள் கடுமையாக உழைப்போம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

'திருமலை - திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல!'

சித்தூர்: திருமலை - திருப்பதி கோயில் சொத்துகளை விற்கப்போவது இல்லை எனத் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி அறிவித்துள்ளார்.

ரஷ்ய மொழியில் ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2'

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2' திரைப்படம் குறித்து ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வாராக்கடன் 6 விழுக்காடு உயர்வு

மும்பை: இரண்டு ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் சுமார் 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எல்லை விவகாரம்: இந்தியாவுக்கு தண்ணீரை நிறுத்தியது நேபாளம்

இந்தியா - நேபாளம் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், பிகாரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு வரவேண்டிய நதிநீரை நேபாளம் தடுத்து நிறுத்தியுள்ளது.

'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன' - ஹர்ஷ் வர்தன்

தற்போதைய கரோனா சோதனை முதன்மையாக ஆபத்தில் இருக்கும் அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும்; மேலும் வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விதி தொடர்ந்து திருத்தப்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

ஹாங்காங் மீதான பிடியை இறுக்கும் சீனா: சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்!

பெய்ஜிங்: ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 47 விமான சேவைகள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் இன்று 47 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

53 நாள்களுக்குப் பின் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 53 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை, நேற்று மீண்டும் தொடங்கியது.

மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள துணிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அனைத்து குடிபெயர்ந்த தொழிலாளர்களும் வீடு செல்லும் வரை நாங்கள் கடுமையாக உழைப்போம்- மத்திய அரசு

டெல்லி: குடிபெயர்ந்த தொழிலாளிகள் அனைவரும் வீடு செல்லும் வரை நாங்கள் கடுமையாக உழைப்போம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

'திருமலை - திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல!'

சித்தூர்: திருமலை - திருப்பதி கோயில் சொத்துகளை விற்கப்போவது இல்லை எனத் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி அறிவித்துள்ளார்.

ரஷ்ய மொழியில் ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2'

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் 'பாகுபலி-2' திரைப்படம் குறித்து ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் வங்கிகளின் வாராக்கடன் 6 விழுக்காடு உயர்வு

மும்பை: இரண்டு ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் சுமார் 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எல்லை விவகாரம்: இந்தியாவுக்கு தண்ணீரை நிறுத்தியது நேபாளம்

இந்தியா - நேபாளம் இடையே எல்லை பிரச்னை நீடித்துவரும் நிலையில், பிகாரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு வரவேண்டிய நதிநீரை நேபாளம் தடுத்து நிறுத்தியுள்ளது.

'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன' - ஹர்ஷ் வர்தன்

தற்போதைய கரோனா சோதனை முதன்மையாக ஆபத்தில் இருக்கும் அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும்; மேலும் வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விதி தொடர்ந்து திருத்தப்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

ஹாங்காங் மீதான பிடியை இறுக்கும் சீனா: சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்!

பெய்ஜிங்: ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.