ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Sep 29, 2021, 3:17 PM IST

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

1. 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2. ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற, ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3. டெல்லியில் கேப்டன்... கலகலக்கும் காங்கிரஸ்... அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?

டெல்லி செல்லும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை புதன்கிழமை (செப்.29) சந்திக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

4. வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் வரும் முன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று தொடங்கிவைத்தார்.

5. பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - வழக்கு ஒத்திவைப்பு

பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

6. பஞ்சாப் வழியில் கேரளம்... போர்க்கொடி தூக்கும் மூத்தத் தலைவர்கள்... ராகுல் காந்தி அதிரடி!

பஞ்சாப் போன்று கேரள காங்கிரசும் உள்கட்சிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிருப்தி தலைவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மலையாள தேசத்துக்கு புதன்கிழமை (செப்.29) சென்றார்.

7. கரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபிஸ் ஊசி செலுத்திய செவிலி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

கரோனா தடுப்பூசி செலுத்தவந்த நபருக்குத் தவறுதலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசி செலுத்திய செவிலி, மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

8. செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கிய சஞ்ஜிப் பானர்ஜி!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தான் வளர்த்துவந்த செல்லப்பிராணி இறந்ததை நினைத்து கண்கலங்கினார்.

9. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எப்பிரச்சினையும் இல்லை'

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

10. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை?

புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள், அரசு ஒப்பந்ததார் உள்ளிட்ட 3 பேர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

1. 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2. ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற, ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3. டெல்லியில் கேப்டன்... கலகலக்கும் காங்கிரஸ்... அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?

டெல்லி செல்லும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை புதன்கிழமை (செப்.29) சந்திக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

4. வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் வரும் முன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று தொடங்கிவைத்தார்.

5. பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை - வழக்கு ஒத்திவைப்பு

பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

6. பஞ்சாப் வழியில் கேரளம்... போர்க்கொடி தூக்கும் மூத்தத் தலைவர்கள்... ராகுல் காந்தி அதிரடி!

பஞ்சாப் போன்று கேரள காங்கிரசும் உள்கட்சிப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிருப்தி தலைவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மலையாள தேசத்துக்கு புதன்கிழமை (செப்.29) சென்றார்.

7. கரோனா தடுப்பூசிக்குப் பதில் ரேபிஸ் ஊசி செலுத்திய செவிலி - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

கரோனா தடுப்பூசி செலுத்தவந்த நபருக்குத் தவறுதலாக ரேபிஸ் எதிர்ப்பு ஊசி செலுத்திய செவிலி, மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

8. செல்லப்பிராணியை நினைத்து கண்கலங்கிய சஞ்ஜிப் பானர்ஜி!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தான் வளர்த்துவந்த செல்லப்பிராணி இறந்ததை நினைத்து கண்கலங்கினார்.

9. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எப்பிரச்சினையும் இல்லை'

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

10. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை?

புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள், அரசு ஒப்பந்ததார் உள்ளிட்ட 3 பேர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.