ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Aug 3, 2020, 9:15 AM IST

etv bharat top 10 news 9 am
etv bharat top 10 news 9 am

புதிய கல்விக் கொள்கையில் அடிப்படை இலக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ச்சி மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை தவறவிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கவர்ச்சிகர வார்த்தைகள், வாய்ஜாலங்கள் நிறைந்துள்ளன, இலக்கை எட்டுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறையில் தற்கொலைப் படை தாக்குதல்!

ஆப்கானிஸ்தானிலுள்ள சிறைச்சாலை ஒன்றியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமுற்றனர்.

காணொலி: கரோனாவிலிருந்து மீண்ட மகளை ஆடலுடன் பூத்தூவி வரவேற்ற தாய்!

கரோனாவிலிருந்து மீண்ட மகளை, அவளது தாய், ஆடலுடன் பூக்கள் தூவி வரவேற்கும் காணொலி காட்சி வைரலாகிவருகிறது.

3 மொழிகளுக்கு 3 கதை; ஆனால் ஒரே கிளைமாக்ஸ்!

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஓப்பனிங், கிளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும், உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

நட்பு குறித்து பேசும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படம் ஒவ்வொருவரையும் அவர்களின் நண்பர்களை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும் என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவரை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

திருவண்ணாமலை: கரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழாசிரியரின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோயம்புத்தூர்: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 224 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த கணவர்; அடித்துக் கொன்ற மனைவி!

மதுரை: திருமங்கலம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த கணவரை அடித்துக் கொலைசெய்த மனைவி உள்ளிட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஃபிராங்கோ முல்லக்கல் பாலியல் வழக்கு: ஆகஸ்ட் 5இல் உச்ச நீதிமன்றம் விசாரணை

கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் மீது அருட்சகோதரி ஒருவர் 2018ஆம் ஆண்டு பாலியல் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது பல புகார்கள் வந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். தற்போது தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் அடிப்படை இலக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ச்சி மற்றும் அறிவின் விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை தவறவிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கவர்ச்சிகர வார்த்தைகள், வாய்ஜாலங்கள் நிறைந்துள்ளன, இலக்கை எட்டுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி!

கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறையில் தற்கொலைப் படை தாக்குதல்!

ஆப்கானிஸ்தானிலுள்ள சிறைச்சாலை ஒன்றியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 20 பேர் காயமுற்றனர்.

காணொலி: கரோனாவிலிருந்து மீண்ட மகளை ஆடலுடன் பூத்தூவி வரவேற்ற தாய்!

கரோனாவிலிருந்து மீண்ட மகளை, அவளது தாய், ஆடலுடன் பூக்கள் தூவி வரவேற்கும் காணொலி காட்சி வைரலாகிவருகிறது.

3 மொழிகளுக்கு 3 கதை; ஆனால் ஒரே கிளைமாக்ஸ்!

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஓப்பனிங், கிளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும், உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

நட்பு குறித்து பேசும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படம் ஒவ்வொருவரையும் அவர்களின் நண்பர்களை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும் என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவரை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

திருவண்ணாமலை: கரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழாசிரியரின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோயம்புத்தூர்: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 224 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த கணவர்; அடித்துக் கொன்ற மனைவி!

மதுரை: திருமங்கலம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த கணவரை அடித்துக் கொலைசெய்த மனைவி உள்ளிட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஃபிராங்கோ முல்லக்கல் பாலியல் வழக்கு: ஆகஸ்ட் 5இல் உச்ச நீதிமன்றம் விசாரணை

கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல் மீது அருட்சகோதரி ஒருவர் 2018ஆம் ஆண்டு பாலியல் புகாரளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது பல புகார்கள் வந்ததையடுத்து கைது செய்யப்பட்டார். தற்போது தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.