ETV Bharat / state

ஆளுநரை இன்று சந்திக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்: திமுக அரசுக்கு எதிராக புகார்?

author img

By

Published : Aug 19, 2021, 7:25 AM IST

Updated : Aug 19, 2021, 7:56 AM IST

திமுக அரசு மீது புகார் அளிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று (ஆக.19) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

EPS OPS
ஓபிஎஸ், இபிஎஸ்

திமுக ஆட்சி அமைந்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இவற்றை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாகவும் அதிமுக தலைமைக் கழகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

கோடநாடு விவகாரம்

இதனிடையே, கோடநாடு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி சயானிடம் காவல் துறையினர் நேற்று முன்தினம் (ஆக.17) மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Banwarilal Purohit
ஆளுநருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று சந்திப்பு

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. பொய்யான வழக்குகளைக் கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது.

நீதிமன்ற விசாரணையின்போது சயான் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும்போது, அதனை மீண்டும் விசாரிப்பதில் சதி இருக்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.

eps
ஆளுநர் மாளிகையில் இபிஎஸ்

ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று சந்திப்பு

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

அப்போது, திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் புகார் அளிக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

திமுக ஆட்சி அமைந்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சோதனைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இவற்றை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் உள்ளதாகவும் அதிமுக தலைமைக் கழகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

கோடநாடு விவகாரம்

இதனிடையே, கோடநாடு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி சயானிடம் காவல் துறையினர் நேற்று முன்தினம் (ஆக.17) மறு விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Banwarilal Purohit
ஆளுநருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று சந்திப்பு

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. பொய்யான வழக்குகளைக் கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது.

நீதிமன்ற விசாரணையின்போது சயான் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும்போது, அதனை மீண்டும் விசாரிப்பதில் சதி இருக்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.

eps
ஆளுநர் மாளிகையில் இபிஎஸ்

ஆளுநருடன் ஓபிஎஸ் - இபிஎஸ் இன்று சந்திப்பு

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

அப்போது, திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் புகார் அளிக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

Last Updated : Aug 19, 2021, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.