சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(24). இவர் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்றிரவு தனது பணி முடிந்து விருகம்பாக்கத்திலிருந்து வடபழனி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெரு அருகே எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிர் திசையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ், பின்னால் அமர்ந்து வந்த பிரபு ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சூடான் தீவிபத்து: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 3 பேரின் உடல்!