ETV Bharat / state

குற்றத் தொகையில் வாங்கிய சொத்துக்கள் மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை நடவடிக்கை சட்டவிரோதமல்ல

கடன் மோசடி வழக்கில் சிபிஐ மூலம் குற்றம் சாட்டப்படாவிட்டாலும், மோசடி பணத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கியவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Oct 20, 2022, 8:53 AM IST

குற்றத் தொகையின் மூலம் சொத்துக்கள் வாங்கியதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதம் அல்ல - நீதிமன்றம்
குற்றத் தொகையின் மூலம் சொத்துக்கள் வாங்கியதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதம் அல்ல - நீதிமன்றம்

சென்னை: கடந்த 2008ஆம் ஆண்டு குளோபல் டிரேட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.15 கோடி கடன் பெற்று, மோசடி செய்ததாக ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த ரூ.15 கோடியைப் பயன்படுத்தி, புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தனக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி, பி.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (அக்.19) விசாரணைக்கு வந்ததது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், “மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதால், அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எந்த விதிமீறலும் இல்லை” என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆகையால் ,அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சிக்காத மீராமிதுன்; தேடுதல் வேட்டையில் காவல்துறை!

சென்னை: கடந்த 2008ஆம் ஆண்டு குளோபல் டிரேட் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.15 கோடி கடன் பெற்று, மோசடி செய்ததாக ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த ரூ.15 கோடியைப் பயன்படுத்தி, புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தனக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி, பி.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (அக்.19) விசாரணைக்கு வந்ததது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், “மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளதால், அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எந்த விதிமீறலும் இல்லை” என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆகையால் ,அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சிக்காத மீராமிதுன்; தேடுதல் வேட்டையில் காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.