தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் பற்றாக்குறையும் உள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இந்தியாவுக்கு அனுப்புமாறு மத்திய, மாநில அரசுகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டா்கள், காலி கண்டெய்னா்கள் இரண்டு இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தடைந்தன.
அவற்றை திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு, ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாநிலத்திற்கு மேலும் காலி சிலிண்டா்கள், காலி கண்டெய்னா்கள் தேவை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை சேமித்து வைக்கப் போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் இல்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசு சிங்கப்பூா் அரசிடம் காலி சிலிண்டா்கள், காலி கண்டெய்னா்களை அனுப்பி வைக்குமாறு உதவி கோரியது. இதற்கு அந்த நாட்டு அரசும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்றிரவு (மே.12) 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது.
இதைத்தொடர்ந்து மேலும் 128 காலி சிலிண்டா்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று(மே.13) அதிகாலை 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தன. அவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனைகள் நடத்தினா். சோதனைகள் முடிந்ததும், தமிழ்நாடு அரசு அலுவலர்களிடம் 256 காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பின்பு அந்த காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலைகளுக்கு அலுவலர்கள் அனுப்பி வைத்தனா். இதைப்போல் இன்று(மே.13) இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டா்கள் சென்னைக்கு வரவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.