ETV Bharat / state

காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு விதிக்கப்படும் 1 சதவீத அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 2:05 PM IST

Edappadi Palaniswami: வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதtஹ் தொகையை வசூலிக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு என ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஈபிஎஸ் அறிக்கை
ஈபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, தமிழ்நாடு மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப் பார்க்காமல் மனம் போன போக்கில் செயல்படும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பதவியேற்று 29 மாதங்களாகிறது.

  • வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்தியோர்க்கு 1 சதவீதம் அபராத தொகையையும் வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

    மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/Q3X52AWppb

    — AIADMK (@AIADMKOfficial) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.

மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அனைத்துத் தொழில் துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் கால தாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, வரி உயர்வுக்காக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது" என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கரோனா கால பேரிடரில் இருந்து தமிழ்நாடு மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வரி உயர்வுகளாலும், விலைவாசி உயர்வுகளாலும், தொழில் துறை முடக்கம், வேலையின்மை காரணமாகவும், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, மன உளைச்சலால் மக்கள் விரோத விடியா அரசை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனது தலைமையிலான அரசில், கரோனா பேரிடர் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்பங்களில் பொருளாதார இடர்ப்பாடுகளை சந்தித்த நேரத்திலும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எந்தவித வரி உயர்வுகளும், கட்டண உயர்வுகளும் மக்கள் மீது திணிக்காமல் காத்து நின்றது.

ஏற்கெனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது விடியா திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி விடியா திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, தமிழ்நாடு மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணிப் பார்க்காமல் மனம் போன போக்கில் செயல்படும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பதவியேற்று 29 மாதங்களாகிறது.

  • வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்தியோர்க்கு 1 சதவீதம் அபராத தொகையையும் வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !

    மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/Q3X52AWppb

    — AIADMK (@AIADMKOfficial) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.

மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அனைத்துத் தொழில் துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் கால தாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, வரி உயர்வுக்காக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது" என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கரோனா கால பேரிடரில் இருந்து தமிழ்நாடு மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வரி உயர்வுகளாலும், விலைவாசி உயர்வுகளாலும், தொழில் துறை முடக்கம், வேலையின்மை காரணமாகவும், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, மன உளைச்சலால் மக்கள் விரோத விடியா அரசை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனது தலைமையிலான அரசில், கரோனா பேரிடர் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்பங்களில் பொருளாதார இடர்ப்பாடுகளை சந்தித்த நேரத்திலும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எந்தவித வரி உயர்வுகளும், கட்டண உயர்வுகளும் மக்கள் மீது திணிக்காமல் காத்து நின்றது.

ஏற்கெனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது விடியா திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி விடியா திமுக அரசைக் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.