ETV Bharat / state

போலீசில் சிக்கிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்!

author img

By

Published : May 25, 2019, 5:52 PM IST

Updated : May 25, 2019, 5:58 PM IST

சென்னை: வளசரவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போதைப் பொருட்கள் விநியோகம் செய்யும் கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.

drug supply

வளசரவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு நேரங்களில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி காவல் ஆய்வாளர் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாந்தோப்பு பகுதியில் சந்தேகம் படும் வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களிடத்தில் சோதனை செய்தபோது ஒரு கிலோ எடைகொண்ட போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த அமர்நாத்(25), சரவணன்(26), வில்லிவாக்கத்தை சேர்ந்த குமார்(33), தமிழ்வாணன்(47), சசிதரன்(29) என்பது தெரியவந்தது. இவர் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாகவந்ததாகவும், அதனை இங்குள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க இருந்தாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் எந்த வகையான போதைப் பொருள் என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இவர்களுக்கு இந்த போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

வளசரவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு நேரங்களில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி காவல் ஆய்வாளர் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாந்தோப்பு பகுதியில் சந்தேகம் படும் வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களிடத்தில் சோதனை செய்தபோது ஒரு கிலோ எடைகொண்ட போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த அமர்நாத்(25), சரவணன்(26), வில்லிவாக்கத்தை சேர்ந்த குமார்(33), தமிழ்வாணன்(47), சசிதரன்(29) என்பது தெரியவந்தது. இவர் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாகவந்ததாகவும், அதனை இங்குள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க இருந்தாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் எந்த வகையான போதைப் பொருள் என கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இவர்களுக்கு இந்த போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

வளசரவாக்கம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் போதைப் பொருட்கள் விநியோகிக்க படுவதாக வந்த தகவலை அடுத்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவிகாவல் ஆய்வாளர் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மாந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடத்தில் ஒரு கிலோ எடை கொண்ட போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த அமர்நாத்(25), சரவணன்(26), வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் (என்ற) குமார்(33), தமிழ்வாணன்(47),  சசிதரன்(29), என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருளும பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருட்கள் ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக  இவர்களுக்கு  வந்ததாகவும் அதனை இங்கு உள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான போதைப் பொருள் என்பதை கண்டறிய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இவர்களுக்கு இந்த போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Last Updated : May 25, 2019, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.