ETV Bharat / state

கோடை விடுமுறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ வேண்டாம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!

author img

By

Published : Jun 1, 2022, 10:29 PM IST

கோடை விடுமுறையில் நடத்தப்படவுள்ள ‘எண்ணும் எழுத்தும்’ என்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை விடுமுறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ வேண்டாம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!
கோடை விடுமுறையில் நடத்தும் ‘எண்ணும் எழுத்தும்’ வேண்டாம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்!

சென்னை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 2023ஆம் கல்வியாண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம் மூலம் வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடக்க கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், “கடந்த 21.5.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவானது. 2021 - 2022ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது.

இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும். குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1, 2ஆகிய இரு நாட்கள் "எண்ணும் எழுத்தும்" பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் தேதி வரையில் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறை எடுக்கும் பிரிவினராவர்.

இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'விளையாட்டு விடுதி மேலாளர் கொடுமைப்படுத்துகிறார்..!' - மாணவிகள் புகார்

சென்னை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 - 2023ஆம் கல்வியாண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம் மூலம் வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடக்க கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மயில் கூறுகையில், “கடந்த 21.5.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவானது. 2021 - 2022ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது.

இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும். குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1, 2ஆகிய இரு நாட்கள் "எண்ணும் எழுத்தும்" பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் தேதி வரையில் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறை எடுக்கும் பிரிவினராவர்.

இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'விளையாட்டு விடுதி மேலாளர் கொடுமைப்படுத்துகிறார்..!' - மாணவிகள் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.