ETV Bharat / state

திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

author img

By

Published : May 25, 2019, 10:18 PM IST

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.,க்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

dmk

தீர்மானங்கள் பினவருமாறு:

17ஆவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குடன் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22சட்டமன்றத் தொகுதிகளில் 13தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒருமக்களவைத் தொகுதியிலும், ஒருசட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. வரலாறு திரும்புகிறது என்று மகிழ்ந்திடும் வகையில், மகத்தான வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைப் பலநூறு முறை தெரிவித்துக்கொள்கிறது.

சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்தசாதனை வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது. ‘மக்களிடம் செல்வோம்,மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற தனிப்பெரும் முழக்கத்தை முன்னிறுத்தி, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு, தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக் கூட்டணிக்கு அளித்து, திசை திருப்பமுயன்றவர்களை செல்லுபடி இல்லாதவர்கள் என்றாக்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் போற்றி வளர்த்து, பண்படுத்தியது திராவிட மண்ணான இந்தச் செம்மொழித் தமிழ்நாடு என்பதை அகில இந்திய அளவில் எவ்வித அய்யப்பாடும் இன்றி உணர்த்தியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களின் உன்னதமான உரிமைப் போர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு நினைவில் கொள்ளத்தக்கது. இந்த உணர்ச்சிமிகு, உயர்வான காட்சியைக் காணவும், வாழ்த்தி மேலும் வழிகாட்டவும், கலைஞர் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் ரத்த நாளங்களிலும் நிறைந்து இருக்கிறது. ஆனாலும் அவர் இருந்த இடத்தில் இருந்து, நாளும் நயம்பட உழைத்து, எங்களை எல்லாம் ஆக்கம் தரும் அரிய வழிநடத்தி, இந்தியாவே வியந்து போற்றும் தகுதிமிக்க தலைமைப் பண்புடன், எஃகுத் தன்மை வாய்ந்ததொரு கூட்டணியை அமைத்து, எங்களுக்காக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு திண்ணையிலும், காடுமேடு கழனி அனைத்திலும் அனல் பறக்கும் பரப்புரையில் அனுதினமும், அல்லும் பகலும் ஈடுபட்டு, 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கலைஞர் ஈட்டித் தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்ற தன்மானத் தந்தைக்கேற்ற தனிப்பெருமைமிக்க தனயனான, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அச்சமின்றிப் பெற்றிடவும், கழகத் தலைவரின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமான முறையில் அயராது பணியாற்றிடவும், கலைஞர் இயற்றித் தந்திருக்கும் ஐம்பெரும் முழக்கங்களான “அண்ணா வழியில்அயராது உழைப்போம்! ஆதிக்கமற்றசமுதாயம் அமைத்தே தீருவோம்! இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!” என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொண்டு இலட்சியப் பயணம் மேற்கொண்டிடவும், ‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது.

தீர்மானங்கள் பினவருமாறு:

17ஆவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குடன் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, 38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22சட்டமன்றத் தொகுதிகளில் 13தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒருமக்களவைத் தொகுதியிலும், ஒருசட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. வரலாறு திரும்புகிறது என்று மகிழ்ந்திடும் வகையில், மகத்தான வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியைப் பலநூறு முறை தெரிவித்துக்கொள்கிறது.

சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்தசாதனை வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது. ‘மக்களிடம் செல்வோம்,மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற தனிப்பெரும் முழக்கத்தை முன்னிறுத்தி, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு, தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக் கூட்டணிக்கு அளித்து, திசை திருப்பமுயன்றவர்களை செல்லுபடி இல்லாதவர்கள் என்றாக்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் போற்றி வளர்த்து, பண்படுத்தியது திராவிட மண்ணான இந்தச் செம்மொழித் தமிழ்நாடு என்பதை அகில இந்திய அளவில் எவ்வித அய்யப்பாடும் இன்றி உணர்த்தியிருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களின் உன்னதமான உரிமைப் போர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு நினைவில் கொள்ளத்தக்கது. இந்த உணர்ச்சிமிகு, உயர்வான காட்சியைக் காணவும், வாழ்த்தி மேலும் வழிகாட்டவும், கலைஞர் இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் ரத்த நாளங்களிலும் நிறைந்து இருக்கிறது. ஆனாலும் அவர் இருந்த இடத்தில் இருந்து, நாளும் நயம்பட உழைத்து, எங்களை எல்லாம் ஆக்கம் தரும் அரிய வழிநடத்தி, இந்தியாவே வியந்து போற்றும் தகுதிமிக்க தலைமைப் பண்புடன், எஃகுத் தன்மை வாய்ந்ததொரு கூட்டணியை அமைத்து, எங்களுக்காக ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு திண்ணையிலும், காடுமேடு கழனி அனைத்திலும் அனல் பறக்கும் பரப்புரையில் அனுதினமும், அல்லும் பகலும் ஈடுபட்டு, 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் கலைஞர் ஈட்டித் தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்கு இணையான வெற்றியைப் பெற்ற தன்மானத் தந்தைக்கேற்ற தனிப்பெருமைமிக்க தனயனான, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதி மேம்படவும், சமத்துவம் போற்றப்படவும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை அச்சமின்றிப் பெற்றிடவும், கழகத் தலைவரின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆக்கபூர்வமான முறையில் அயராது பணியாற்றிடவும், கலைஞர் இயற்றித் தந்திருக்கும் ஐம்பெரும் முழக்கங்களான “அண்ணா வழியில்அயராது உழைப்போம்! ஆதிக்கமற்றசமுதாயம் அமைத்தே தீருவோம்! இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!” என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொண்டு இலட்சியப் பயணம் மேற்கொண்டிடவும், ‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமது மகேசர்கள்’ என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது.

தி.மு.க. நாடாளுமன்றஉறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

என்றம் மக்களுக்காகவே நாம்’என்ற உறுதியுடன், நம் கடன் தொண்டூழியம் புரிவதே!

 

பதினேழாவது மக்களவைக்குநடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையில், கழகத் தலைவர்  தளபதிமு.க.ஸ்டாலின் அவர்கள்,தொலைநோக்குடன் அமைத்த மதசார்பற்றமுற்போக்குக் கூட்டணிக்கு, 
38 தொகுதிகளில் 37 தொகுதிகளிலும், 22சட்டமன்றத் தொகுதிகளில் 13தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒருமக்களவைத் தொகுதியிலும், ஒருசட்டமன்றத் தொகுதியிலும், வரலாறுதிரும்புகிறது என்று மகிழ்ந்திடும் வகையில், மகத்தான வெற்றியை வழங்கிய தமிழ்நாடுமற்றும் புதுவை மக்களுக்கும், இந்தவெற்றியை பெறுவதற்காக பாடுபட்ட கழகநிர்வாகிகள் - தோழர்களுக்கும், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் - தொண்டர்கள்அனைவருக்கும், கழக நாடாளுமன்றஉறுப்பினர்களின் இந்தக்  கூட்டம் மனமார்ந்தநன்றியைப் பலநூறு முறை தெரிவித்துக்கொள்கிறது.

சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்தசாதனை  வெற்றியை வையகமே வியந்துபோற்றுகிறது. ‘மக்களிடம் செல்வோம்,மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களைவெல்வோம்’ என்ற தனிப்பெரும் முழக்கத்தைமுன்னிறுத்தி, திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையில் அமைந்தகூட்டணிக்கு, தமிழகத்தில் பதிவானவாக்குகளில் 2 கோடியே 23 லட்சத்து 3ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக் கூட்டணிக்கு அளித்து, திசை திருப்பமுயன்றவர்களை செல்லுபடி இல்லாதவர்கள்என்றாக்கி, தந்தை பெரியார் - பேரறிஞர்அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர்போற்றி வளர்த்து, பண்படுத்தியது திராவிடமண்ணான இந்தச் செம்மொழித்  தமிழ்நாடுஎன்பதை அகில இந்திய அளவில் எவ்விதஅய்யப்பாடும் இன்றி உணர்த்தியிருக்கும்தமிழக வாக்காளப் பெருமக்களின்உன்னதமான உரிமைப் போர் உலகத் தமிழர்ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ளவைக்கிறது.

ஊடகவியலாளர்கள் -பத்திரிகையாளர்கள் ஆகியோரின்ஒத்துழைப்பு நினைவில் கொள்ளத்தக்கது.இந்த உணர்ச்சிமிகு, உயர்வான காட்சியைக்காணவும், வாழ்த்தி மேலும்  வழிகாட்டவும்,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்இல்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின்இரத்த நாளங்களிலும் நிறைந்து இருக்கிறது. ஆனாலும் அவர் இருந்தஇடத்தில் இருந்து, நாளும் நயம்பட உழைத்து,எங்களை எல்லாம் ஆக்கம் தரும் அரியவழிநடத்தி - இந்தியாவே வியந்து போற்றும்தகுதிமிக்க  தலைமைப் பண்புடன், எஃகுத்தன்மை வாய்ந்ததொரு கூட்டணியைஅமைத்து - எங்களுக்காக ஒவ்வொருஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு திண்ணையிலும், காடுமேடுகழனி அனைத்திலும் அனல் பறக்கும்பிரச்சாரத்தில்,  அனுதினமும், அல்லும்பகலும் ஈடுபட்டு,  1971, 2004 நாடாளுமன்றத்தேர்தல்களில் தலைவர் கலைஞர் அவர்கள்ஈட்டித் தந்த மிகப்பெரிய வெற்றிகளுக்குஇணையான வெற்றியைப் பெற்ற -தன்மானத் தந்தைக்கேற்ற  தனிப்பெருமைமிக்க தனயனான,  கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நாடாளுமன்றஉறுப்பினர்களின் இந்தக் கூட்டம்இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைமீட்டிடவும், நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், சமூகநீதிமேம்படவும், சமத்துவம் போற்றப்படவும்,மதச்சார்பின்மையைப்  பாதுகாத்திடவும் -அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ளஅடிப்படை உரிமைகளை அச்சமின்றிப் பெற்றிடவும்,  கழகத் தலைவர் அவர்களின்சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின்வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத் திற்கும்ஆக்கபூர்வமான முறையில் அயராதுபணியாற்றிடவும், தலைவர் கலைஞர்அவர்கள் இயற்றித் தந்திருக்கும் ஐம்பெரும்முழக்கங்களான “அண்ணா வழியில்அயராது உழைப்போம்! ஆதிக்கமற்றசமுதாயம் அமைத்தே தீருவோம்!  இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!  வன்முறைதவிர்த்து வறுமையை  வெல்வோம்!மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!” என்பதை இதயத்தில் ஏந்தி, அவற்றையேவழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொண்டுஇலட்சியப் பயணம் மேற்கொண்டிடவும், ‘மக்களே நம் எஜமானர்கள் - மக்களே நமதுமகேசர்கள்’ என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணி  ஆற்றிடவும்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக்கூட்டம் உறுதியெடுத்துக் கொள்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.