ETV Bharat / state

'திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு இல்லாவிட்டால் ஒரு பேச்சு' - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 19, 2021, 1:16 PM IST

மாநில சுயாட்சி , நீட் தேர்வு ரத்து , அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் , ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு , ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டு
ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப். 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலை.

அந்த வகையில், தற்போது பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

திமுகவின் இரட்டை நிலைபாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் தேர்தலுக்கு முந்தைய திமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டது.

'சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை'

நேற்று (செப்.18) லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45ஆவது கவுன்சில் கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் , திமுக சார்பில் நிதியமைச்சர் கலந்துகொள்ளாவிட்டாலும் , அவர் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் , " மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும் , இதையும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் , அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை " என்று தெரிவித்திருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது .

அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்குப் பிந்தையை திமுகவின் நிலைப்பாடு.

பொதுமக்களின் சுமையை குறைக்க வழிவகை

இதன் விளைவாக , ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது , பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது .

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என்ற திமுகவின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி

சென்னை: பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப். 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலை.

அந்த வகையில், தற்போது பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

திமுகவின் இரட்டை நிலைபாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலிய பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் தேர்தலுக்கு முந்தைய திமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மாறிவிட்டது.

'சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை'

நேற்று (செப்.18) லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45ஆவது கவுன்சில் கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் , திமுக சார்பில் நிதியமைச்சர் கலந்துகொள்ளாவிட்டாலும் , அவர் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் , " மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும் , இதையும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் , அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை " என்று தெரிவித்திருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது .

அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்குப் பிந்தையை திமுகவின் நிலைப்பாடு.

பொதுமக்களின் சுமையை குறைக்க வழிவகை

இதன் விளைவாக , ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது , பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது .

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என்ற திமுகவின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.