ETV Bharat / state

தேமுதிக தலைமை அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த நீர் பந்தல், பேனருக்கு தீ வைப்பு!

author img

By

Published : May 6, 2022, 3:02 PM IST

கோயம்பேட்டில் தேமுதிக கட்சி அலுவகம் முன்பு இருந்த நீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் மற்றும் பேனருக்கு தீ வைத்து எரிப்பு...!
தேமுதிக அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் மற்றும் பேனருக்கு தீ வைத்து எரிப்பு...!

சென்னை: கோயம்பேடு ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் மெயின் கேட் அருகே தேமுதிக கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் கொளுந்துவிட்டு எரிவதாக பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முழுவதுமாக எரிந்தது. நள்ளிரவு என்பதால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனையடுத்து தண்ணீர் பந்தல் மற்றும் பேனருக்கு தீவைத்து சென்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் யார் என்பதை அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: கோயம்பேடு ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் மெயின் கேட் அருகே தேமுதிக கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் மற்றும் பேனர் கொளுந்துவிட்டு எரிவதாக பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முழுவதுமாக எரிந்தது. நள்ளிரவு என்பதால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனையடுத்து தண்ணீர் பந்தல் மற்றும் பேனருக்கு தீவைத்து சென்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் யார் என்பதை அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.