ETV Bharat / state

"ரெட் லிஸ்டில்" உள்ள மாவட்டங்கள் எவை? - District wise corona positive cases in Tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ள மாவட்டங்களின் புள்ளிவிபரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

District wise corona positive cases in Tamilnadu
District wise corona positive cases in Tamilnadu
author img

By

Published : Apr 12, 2020, 1:14 PM IST

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 93 ஆயிரத்து 146 பேர் வீட்டில் நேற்று வரை 28 நாட்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

அவர்களில், 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை 49,963 பேர் முடித்துள்ளனர். தற்போது 93 ஆயிரத்து 549 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 165 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனிமைப்படுத்த வார்டில் ஆயிரத்து 884 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கும் , சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கும், திருச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக புள்ளிவிவரம்:

மாவட்டம்

கரோனா வைரஸ்

தொற்றால்

பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை

சென்னை182
கோயம்புத்தூர்97
ஈரோடு60
திருநெல்வேலி56
திண்டுக்கல்55
நாமக்கல்41
செங்கல்பட்டு41
தேனி40
திருச்சிராப்பள்ளி39
ராணிப்பேட்டை36
திருவள்ளூர்29
திருப்பூர்26
மதுரை25
தூத்துக்குடி24
நாகப்பட்டினம்24
கரூர்23
விழுப்புரம்23
திருப்பத்தூர்16
கன்னியாகுமரி15
கடலூர்15
சேலம்14
திருவாரூர்13
விருதுநகர் 11
தஞ்சாவூர்11
வேலூர் 11
திருவண்ணாமலை11
நீலகிரி9
காஞ்சிபுரம்6
சிவகங்கை6
தென்காசி3
கள்ளக்குறிச்சி3
ராமநாதபுரம்2
அரியலூர்1
பெரம்பலூர்1

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்மாவட்டங்கள் கூடுதல் கண்காணிப்பு மாவட்டங்களாக (ரெட் அலர்ட்) சுகாதாரத்துறைப் பட்டியிலிட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் பாதிப்புகள் மிதமாக உள்ளன. எட்டு மாவட்டங்களில் பாதிப்புகள் ஓரளவு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரெட் அலட்டில் உள்ள மாவட்ட மக்கள் பயப்பட தேவையில்லை. கவனத்துடன் அரசின் விதுமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே போதுமானதாகும். இப்போது நமக்கு தேவை பயமல்ல... கவனம்தான் முக்கியம்...

இதையும் படிங்க....தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 93 ஆயிரத்து 146 பேர் வீட்டில் நேற்று வரை 28 நாட்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

அவர்களில், 28 நாட்கள் தொடர் கண்காணிப்பினை 49,963 பேர் முடித்துள்ளனர். தற்போது 93 ஆயிரத்து 549 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 165 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனிமைப்படுத்த வார்டில் ஆயிரத்து 884 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கும் , சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கும், திருச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக புள்ளிவிவரம்:

மாவட்டம்

கரோனா வைரஸ்

தொற்றால்

பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை

சென்னை182
கோயம்புத்தூர்97
ஈரோடு60
திருநெல்வேலி56
திண்டுக்கல்55
நாமக்கல்41
செங்கல்பட்டு41
தேனி40
திருச்சிராப்பள்ளி39
ராணிப்பேட்டை36
திருவள்ளூர்29
திருப்பூர்26
மதுரை25
தூத்துக்குடி24
நாகப்பட்டினம்24
கரூர்23
விழுப்புரம்23
திருப்பத்தூர்16
கன்னியாகுமரி15
கடலூர்15
சேலம்14
திருவாரூர்13
விருதுநகர் 11
தஞ்சாவூர்11
வேலூர் 11
திருவண்ணாமலை11
நீலகிரி9
காஞ்சிபுரம்6
சிவகங்கை6
தென்காசி3
கள்ளக்குறிச்சி3
ராமநாதபுரம்2
அரியலூர்1
பெரம்பலூர்1

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்மாவட்டங்கள் கூடுதல் கண்காணிப்பு மாவட்டங்களாக (ரெட் அலர்ட்) சுகாதாரத்துறைப் பட்டியிலிட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களில் பாதிப்புகள் மிதமாக உள்ளன. எட்டு மாவட்டங்களில் பாதிப்புகள் ஓரளவு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரெட் அலட்டில் உள்ள மாவட்ட மக்கள் பயப்பட தேவையில்லை. கவனத்துடன் அரசின் விதுமுறைகளைப் பின்பற்றி நடந்தாலே போதுமானதாகும். இப்போது நமக்கு தேவை பயமல்ல... கவனம்தான் முக்கியம்...

இதையும் படிங்க....தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.