ETV Bharat / state

'பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களைப் பணியில் சேர்த்து நிரந்தரமாக்க வேண்டும்' - சீமான் அறிக்கை

சென்னை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்த்து, அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் வலியுறுத்தல்!
சீமான் வலியுறுத்தல்
author img

By

Published : Jan 28, 2021, 10:10 PM IST

சென்னை: பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த பத்தாண்டுகளாக சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்துவந்த தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பணிநீக்கம் செய்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் வயிற்றிலடித்து, வாழ்வாதாரத்தை நசுக்கும் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

மருத்துவர்களைப்போல, காவலர்களைப்போல தூய்மைப் பணியாளர்களும் போற்றுதலுக்குரியவர்களே. மற்றவர்கள் முகம் சுளித்து, வெறுத்து ஒதுக்கும் பொருள்களை அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மைப்படுத்தும் பெருமதிப்புமிக்க அவர்களின் மகத்தான பணியென்பது தலைவணங்கி, வாழ்த்தும் தகுதி உடையது.

மருத்துவர்கள், காவலர்கள் போலத் தூய்மைப்பணியாளர்கள் பணியும் நேர காலம் பாராது தொடர்ந்து இயங்கும் பணியாகும். பேரிடர் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது.

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

அத்தகைய தூய்மைப் பணியாளர்களை, பத்தாண்டுக் காலமாகக் குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்திருப்பதென்பது, அவர்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தும் செயல்.

பத்தாண்டுகள் பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்யப்படாமையால் அரசு வழங்கக்கூடிய குழு காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட இதர உரிமைகள் எதுவும் முறையாகக் கிடைக்காத சூழலே நிலவுகிறது.

கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட பேரிடர் காலச் சிறப்பு ஊக்கவூதியம் கூடக் கிடைக்காததால், அதிகப் பணிச்சுமையுடன் மனச்சுமை மற்றும் பொருளாதாரச் சுமையும் சேர்ந்து தளவுர்வுற்ற நிலையிலும் பணியிலிருந்து பின்வாங்காமல், தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றிவந்தனர்.

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அத்தகைய ஒப்பற்றவர்களின் பணியின் மாண்பை உணர்ந்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, சமமான ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டிய அரசு, திடீரென பணிநீக்கம் செய்திருப்பது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்றதாகும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் நெடுநாள் நியாயமான கோரிக்கைகளான பணிநிரந்தரம், சரியான, சமமான ஊதியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்,

தூய்மைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதை முழுவதுமாகத் தனியார் பெருநிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கும் கும்பல்’ - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

சென்னை: பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த பத்தாண்டுகளாக சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்துவந்த தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றிப் பணிநீக்கம் செய்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் வயிற்றிலடித்து, வாழ்வாதாரத்தை நசுக்கும் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

மருத்துவர்களைப்போல, காவலர்களைப்போல தூய்மைப் பணியாளர்களும் போற்றுதலுக்குரியவர்களே. மற்றவர்கள் முகம் சுளித்து, வெறுத்து ஒதுக்கும் பொருள்களை அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மைப்படுத்தும் பெருமதிப்புமிக்க அவர்களின் மகத்தான பணியென்பது தலைவணங்கி, வாழ்த்தும் தகுதி உடையது.

மருத்துவர்கள், காவலர்கள் போலத் தூய்மைப்பணியாளர்கள் பணியும் நேர காலம் பாராது தொடர்ந்து இயங்கும் பணியாகும். பேரிடர் காலத்தில் உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது.

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

அத்தகைய தூய்மைப் பணியாளர்களை, பத்தாண்டுக் காலமாகக் குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்திருப்பதென்பது, அவர்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தும் செயல்.

பத்தாண்டுகள் பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்யப்படாமையால் அரசு வழங்கக்கூடிய குழு காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட இதர உரிமைகள் எதுவும் முறையாகக் கிடைக்காத சூழலே நிலவுகிறது.

கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட பேரிடர் காலச் சிறப்பு ஊக்கவூதியம் கூடக் கிடைக்காததால், அதிகப் பணிச்சுமையுடன் மனச்சுமை மற்றும் பொருளாதாரச் சுமையும் சேர்ந்து தளவுர்வுற்ற நிலையிலும் பணியிலிருந்து பின்வாங்காமல், தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றிவந்தனர்.

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அத்தகைய ஒப்பற்றவர்களின் பணியின் மாண்பை உணர்ந்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, சமமான ஊதியம் வழங்கி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டிய அரசு, திடீரென பணிநீக்கம் செய்திருப்பது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போன்றதாகும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிகத் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களின் நெடுநாள் நியாயமான கோரிக்கைகளான பணிநிரந்தரம், சரியான, சமமான ஊதியம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்,

தூய்மைப் பணியாளர்களைப் பணியமர்த்துவதை முழுவதுமாகத் தனியார் பெருநிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கும் கும்பல்’ - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.