ETV Bharat / state

தொலைந்த நகைப்பையை சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த காவல்துறை! - chennai

சென்னை: அண்ணா சாலையில் தவறவிட்ட நகை பையை எடுத்துச் சென்றவர்களை சிசிடிவி கருவியின் உதவியோடு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நகையை தவறவிட்டவர்
author img

By

Published : May 15, 2019, 12:01 AM IST


சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர் தனது மாமியாருடன் வெளியில் சென்று விட்டு அண்ணாசாலை வழியாக ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த நகைபையை தவறவிட்டுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கையில் வைத்திருந்த நகைபை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நகையை தவறவிட்டவர் பேட்டி

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அண்ணாசாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் வந்த இருவர் நகைப் பையை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ செல்லும் வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொத்தவால்சாவடிப் பகுதிக்கு ஆட்டோ செல்வது பதிவாகியதையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த தனிப்படையினர் கேமராவில் பதிவாகியிருந்த ஆட்டோ டிரைவரின் அடையாளத்தை வைத்து விவரங்களை கேட்டறிந்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பார்த்தசாரதி மற்றும் கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் நகைப் பையை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த 19 சவரன் நகையை தனிப்படையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.


சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர் தனது மாமியாருடன் வெளியில் சென்று விட்டு அண்ணாசாலை வழியாக ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த நகைபையை தவறவிட்டுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கையில் வைத்திருந்த நகைபை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நகையை தவறவிட்டவர் பேட்டி

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அண்ணாசாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் வந்த இருவர் நகைப் பையை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ செல்லும் வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொத்தவால்சாவடிப் பகுதிக்கு ஆட்டோ செல்வது பதிவாகியதையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த தனிப்படையினர் கேமராவில் பதிவாகியிருந்த ஆட்டோ டிரைவரின் அடையாளத்தை வைத்து விவரங்களை கேட்டறிந்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பார்த்தசாரதி மற்றும் கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் நகைப் பையை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த 19 சவரன் நகையை தனிப்படையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் தவறவிட்ட நகைபையை திருடிய திருடனை சி.சி.டிவி உதவி கொண்டு சென்னை போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவை சேர்ந்தவர் ப்ரியா. கடந்த 4ஆம் தேதி அவரும்,அவரது மாமியாரும் அண்ணா சாலை வழியாக ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது தனது கையில் வைத்திருந்த நகைகளை தவறவிட்டுள்ளார் . நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் நகைப்பையை கிடைக்காததால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகார் கொடுத்த இரவிலிருந்து சிசிடிவி கேமராக்கள் கொண்டு நகை காணாமல் போன இடத்தில் இருந்து தேடி வந்துள்ளனர். தாராப்பூர் டவர்ஸ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது அப்பகுதியாக வந்த சரக்கு ஆட்டோவில்  இருந்த நபர் ஒருவர் நகை பையை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது . தொடர்ந்து அடுத்தடுத்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஆட்டோ செல்லும் வழியை போலீசார் கண்டறிந்தனர். கொத்தவால் சாவடியில் அந்த ஆட்டோ நின்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆட்டோவின் அடையாளத்தை வைத்து தனிப்படை போலீசார் ஆட்டோ டிரைவர் மற்றும் அவருடன் இருந்த அவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணை செய்ததில் ஆட்டோ ஓட்டுனர் பார்த்தசாரதி மற்றும் கலைச்செல்வன் என்ற இரண்டு பேர் நகையை எடுத்து சென்றது உறுதியானது. அவர்களிடம் இருந்து 19 சவரன் நகையை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். Cctv கேமராக்கள் இருந்ததால்தான் தனது நகை கிடைத்துள்ளதாக நகையை பறி கொடுத்தவர்கள்  நன்றி தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.