ETV Bharat / state

சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 29 இல் இருந்து 12ஆக குறைவு

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 29லிருந்து 12ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
author img

By

Published : Sep 8, 2020, 10:16 PM IST

கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது.

இந்த பரவலை தடுக்கும் வகையில் முதலில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைத்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்கனவே 29ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 12ஆக குறைந்துள்ளது.

மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

மாதவரம் - 7

அண்ணா நகர் - 3

வளசரவாக்கம் - 1

சோழிங்கநல்லூர் - 1

கரோனா வைரஸால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது.

இந்த பரவலை தடுக்கும் வகையில் முதலில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு தெருவையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் தெருவை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைத்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்கனவே 29ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், தற்போது 12ஆக குறைந்துள்ளது.

மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

மாதவரம் - 7

அண்ணா நகர் - 3

வளசரவாக்கம் - 1

சோழிங்கநல்லூர் - 1

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.