ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஊரடங்கு மீறல்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த புள்ளி விவரம்

author img

By

Published : May 25, 2020, 11:29 AM IST

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 62 நாள்களில் ஊரடங்கை மீறியதாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து காவல் துறையினர்
போக்குவரத்து காவல் துறையினர்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 62 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு, 7 கோடியே 63 லட்சத்து 4 ஆயிரத்து 184 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஏறிக் கொண்டே போகும் காவல் துறையின் அபராத தொகை!

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 62 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 5 லட்சத்து 26 ஆயிரத்து 507 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 688 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு, 7 கோடியே 63 லட்சத்து 4 ஆயிரத்து 184 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஏறிக் கொண்டே போகும் காவல் துறையின் அபராத தொகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.