ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் குறித்த புள்ளி விவரம்

author img

By

Published : May 19, 2020, 12:19 PM IST

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 56 நாட்களில் ஊரடங்கை மீறியதாக 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள்
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, அனைத்து நேரங்களிலும் மக்கள் வீடுகளில் இருக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!
ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!

இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதலே, விதிகளை மீறி பயணிப்பவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 56 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு, 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து 44 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள போதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, அனைத்து நேரங்களிலும் மக்கள் வீடுகளில் இருக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!
ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!

இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதலே, விதிகளை மீறி பயணிப்பவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 56 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்டு, 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து 44 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் 144 உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட காவல் ஆணையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.