ETV Bharat / state

‘அகில இந்திய பிரச்னையில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் மட்டும் போராடுவது வேதனை’ - டி.கே. ரங்கராஜன் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னை: அகில இந்திய பிரச்னையாக உள்ள மருத்துவர்கள் விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் மட்டும் போராடுவது வேதனையளிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறியுள்ளார்.

state medical conference
author img

By

Published : Nov 10, 2019, 5:05 PM IST

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கு எதிரான வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 திரும்பப்பெற வேண்டும், பொதுச் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவ மாணவர்களின் மாநாட்டு மலரைப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் முதல் மாநாடு

இந்நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், "மருத்துவ மாணவர்கள் நீதிக்காகப் போராடிவருகின்றனர். இப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துகின்றனர். மருத்துவர்கள் பிரச்னை என்பது அகில இந்திய பிரச்னையாக உள்ளது, ஆனால் மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர். அதிலும் சிலர் ஆதரவு தருவதில்லை, எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த 2 போலி மருத்துவர்கள் கைது!

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பாக முதல் மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கு எதிரான வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 திரும்பப்பெற வேண்டும், பொதுச் சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குவதை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவ மாணவர்களின் மாநாட்டு மலரைப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் முதல் மாநாடு

இந்நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், "மருத்துவ மாணவர்கள் நீதிக்காகப் போராடிவருகின்றனர். இப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துகின்றனர். மருத்துவர்கள் பிரச்னை என்பது அகில இந்திய பிரச்னையாக உள்ளது, ஆனால் மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர். அதிலும் சிலர் ஆதரவு தருவதில்லை, எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த 2 போலி மருத்துவர்கள் கைது!

Intro:தமிழ்நாடு மருத்துவ மாணவர்களின் சங்கம் சார்பில் முதல் மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது


Body:தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பாக மாநில முதல் மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி கே ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்

முன்னதாக மருத்துவ மாணவர்களின் மாநாட்டு மலரை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்

இந்திய மருத்துவ கழகத்தை ஒலித்தது நெக்ஸ்ட் தேர்வை மருத்துவ மாணவர்களிடம் திணிப்பது ஏன்?

மாணவர்களுக்கு எதிரான வரைவு தேசிய கல்வி கொள்கை 2019 திரும்பப்பெற வேண்டும்

நவீன அறிவியல் மருத்துவம் பயிலாதோர்க்கு மருத்துவ சிகிச்சை வழங்க உரிமம் வழங்குவது ஏன்?

பொது சுகாதாரத் துறையை தனியார் மயமாக்குவதை ஏன்?

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது

இதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி கே ரங்கராஜன் பேசுகையில்

மருத்துவர்கள் மாணவர்கள் நீதிக்காக போராடி வருகின்றனர் இப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்துகின்றனர் அகில இந்திய பிரச்சனையாக உள்ளது ஆனால் மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் மருத்துவ மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர் அதிலும் சிலர் ஆதரவு தருவதில்லை எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கூறினார்





Conclusion:தமிழ்நாடு மருத்துவ மாணவர்களின் சங்கம் சார்பில் முதல் மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.