ETV Bharat / state

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - சென்னையில் 1.85 லட்சம் பேர் பயன் - chennai latest news

சென்னையில் நேற்று (செப்.12) ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 320 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
author img

By

Published : Sep 13, 2021, 7:05 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் உயிர்காக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.12) தமிழ்நாடு முழுவதும், 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ட்கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

1.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

குறிப்பாக சென்னையில் நேற்று (செப்.12) ஆயிரத்து 600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 320 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 ஆயிரத்து 400 பேருக்கும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 5ஆயிரத்து 978 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,608 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் உயிர்காக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால், மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.12) தமிழ்நாடு முழுவதும், 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ட்கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

1.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

குறிப்பாக சென்னையில் நேற்று (செப்.12) ஆயிரத்து 600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 320 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 ஆயிரத்து 400 பேருக்கும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 5ஆயிரத்து 978 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 1,608 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.