ETV Bharat / state

'மீண்டு வா சென்னையே': 4 மண்டலங்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Aug 6, 2020, 3:58 PM IST

சென்னை: சென்னையில் நான்கு மண்டலங்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.

4 மண்டலங்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
4 மண்டலங்களில் குணமடைந்தவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக கோடம்பாக்கம், அண்ணா நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கரோனாவிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது தேனாம்பேட்டையிலும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து நான்கு நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 87 விழுக்காடு, அதாவது 90 ஆயிரத்து 966 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 811 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றினால் இரண்டாயிரத்து 227 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

  • கோடம்பாக்கம் - 10,625 பேர்
  • அண்ணா நகர் - 10,472 பேர்
  • ராயபுரம் - 10,509 பேர்
  • தேனாம்பேட்டை - 10,065 பேர்
  • தண்டையார்பேட்டை - 8,923 பேர்
  • திரு.வி.க. நகர் - 7,320 பேர்
  • அடையாறு - 6,457 பேர்
  • வளசரவாக்கம் - 4,952 பேர்
  • அம்பத்தூர் - 4,893 பேர்
  • திருவொற்றியூர் - 3,322 பேர்
  • மாதவரம் - 2,904 பேர்
  • ஆலந்தூர் - 2,816 பேர்
  • சோழிங்கநல்லூர் - 2,079 பேர்
  • பெருங்குடி - 2,577 பேர்
  • மணலி - 1,659 பேரும் குணமடைந்துள்ளது மாநிலத் தலைநகரான சென்னை கரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

இதையும் படிங்க...கரோனா அறிகுறி குறித்துப் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக கோடம்பாக்கம், அண்ணா நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கரோனாவிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது தேனாம்பேட்டையிலும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து நான்கு நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 87 விழுக்காடு, அதாவது 90 ஆயிரத்து 966 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 811 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்தத் தொற்றினால் இரண்டாயிரத்து 227 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

  • கோடம்பாக்கம் - 10,625 பேர்
  • அண்ணா நகர் - 10,472 பேர்
  • ராயபுரம் - 10,509 பேர்
  • தேனாம்பேட்டை - 10,065 பேர்
  • தண்டையார்பேட்டை - 8,923 பேர்
  • திரு.வி.க. நகர் - 7,320 பேர்
  • அடையாறு - 6,457 பேர்
  • வளசரவாக்கம் - 4,952 பேர்
  • அம்பத்தூர் - 4,893 பேர்
  • திருவொற்றியூர் - 3,322 பேர்
  • மாதவரம் - 2,904 பேர்
  • ஆலந்தூர் - 2,816 பேர்
  • சோழிங்கநல்லூர் - 2,079 பேர்
  • பெருங்குடி - 2,577 பேர்
  • மணலி - 1,659 பேரும் குணமடைந்துள்ளது மாநிலத் தலைநகரான சென்னை கரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

இதையும் படிங்க...கரோனா அறிகுறி குறித்துப் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.