ETV Bharat / state

இன்று 231 பேருக்கு கரோனா: தமிழ்நாட்டில் 2,757 ஆக உயர்வு

author img

By

Published : May 3, 2020, 12:22 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

உலகம் முழுவதும் 184 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 1,152 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் மூலம் தெரியவருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை இன்று (02.05.2020) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 174 பேருக்கும், அரியலூரில் 18 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகியவை அதிக பாதிப்புகளைக் கொண்ட 12 மாவட்டங்கள் "ரெட் அலார்ட்" மாவட்டங்களாகவும், 15 பேருக்கும் குறைவான பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களை ஆரஞ்சு நிறத்திலும், ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை நிறத்திலும் வகைபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்
தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்

மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான சுகாதாரத் துறை அலுவலர்கள், பரிசோதனை மையங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் கண்கானிப்பு அதிகமாக உள்ள சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களிடையே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறி விட்டதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் 1,341 பேர் 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திருப்பியுள்ளனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரும் நாள்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி? - முதலமைச்சர் தகவல்

உலகம் முழுவதும் 184 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 1,152 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் மூலம் தெரியவருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை இன்று (02.05.2020) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 174 பேருக்கும், அரியலூரில் 18 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகியவை அதிக பாதிப்புகளைக் கொண்ட 12 மாவட்டங்கள் "ரெட் அலார்ட்" மாவட்டங்களாகவும், 15 பேருக்கும் குறைவான பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களை ஆரஞ்சு நிறத்திலும், ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை நிறத்திலும் வகைபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்
தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்

மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமான சுகாதாரத் துறை அலுவலர்கள், பரிசோதனை மையங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் கண்கானிப்பு அதிகமாக உள்ள சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களிடையே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? அல்லது வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறி விட்டதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் 1,341 பேர் 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திருப்பியுள்ளனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரும் நாள்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி? - முதலமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.