ETV Bharat / state

டெல்லி சென்று வந்தவர்களால் கரோனா அதிகம் பரவ வாய்ப்பு!

author img

By

Published : Mar 31, 2020, 9:09 PM IST

Updated : Apr 1, 2020, 7:48 PM IST

சென்னை: டெல்லி ஜந்தர்மந்தர் சென்று வந்தவர்கள் மூலம்தான் தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.

sanmukam
sanmukam

கரோனோ நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் சண்முகம், காவல் துறைத் தலைவர் திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முகம், "கரோனா தொற்றினைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். இதற்கு ஆளுநர் பாராட்டுகளைத் தெரிவித்தார். தற்போது ஒரு கோடியே 50 லட்சம் முகக்கவசங்கள் வாங்கவும், 2,500 வென்ட்டிலேட்டர் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று அதிகரிக்கும்போது, தேவைப்படும் அளவிற்கு படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கரோனா தொற்று கண்டறிய ஆய்வகங்கள் 17 உள்ள நிலையில், கூடுதலாக 6 ஆய்வகங்கள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் முகக்கவசங்களைத் தயார் செய்துவருகின்றனர்.

திருப்பூரில் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. டெல்லியில் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்களுக்குத்தான் நோய் தொற்று அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியினை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்ற நபர்களில் 1,131 பேர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவந்துள்ளனர். அவர்களில் 800 நபர்களின் இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளோம். 300 பேர் தங்கியிருக்கும் இருப்பிடத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் போன் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் அடையாளம் காண்போம். மீதம் 400 பேர் டெல்லியிலேயே உள்ளனர்.

அவர்களுக்கு அங்கு உணவு உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படுகிறது. டெல்லி சென்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் காவல் துறையின் மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

தலைமைச் செயலாளர் பேட்டி.

இவர்கள் மூலம்தான் கரோனா தொற்று அதிகளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் தனிமையில் ஒழுங்காக இல்லாவிட்டால் மருத்துவமனையின் கண்காணிப்பிற்கு மாற்றப்படுவார்கள்.

நோயின் தாக்கத்தை உணர்ந்து காவல் துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களே நோயின் தீவிரத்தை உணர்ந்து வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் சம்பளத்தை குறைக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மாடுகளுக்கு உணவாக மாறிய மல்லிகைப் பூ செடிகள்

கரோனோ நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் சண்முகம், காவல் துறைத் தலைவர் திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முகம், "கரோனா தொற்றினைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். இதற்கு ஆளுநர் பாராட்டுகளைத் தெரிவித்தார். தற்போது ஒரு கோடியே 50 லட்சம் முகக்கவசங்கள் வாங்கவும், 2,500 வென்ட்டிலேட்டர் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று அதிகரிக்கும்போது, தேவைப்படும் அளவிற்கு படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கரோனா தொற்று கண்டறிய ஆய்வகங்கள் 17 உள்ள நிலையில், கூடுதலாக 6 ஆய்வகங்கள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் முகக்கவசங்களைத் தயார் செய்துவருகின்றனர்.

திருப்பூரில் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. டெல்லியில் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்களுக்குத்தான் நோய் தொற்று அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியினை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்ற நபர்களில் 1,131 பேர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவந்துள்ளனர். அவர்களில் 800 நபர்களின் இருப்பிடத்தினை கண்டுபிடித்துள்ளோம். 300 பேர் தங்கியிருக்கும் இருப்பிடத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் போன் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் அடையாளம் காண்போம். மீதம் 400 பேர் டெல்லியிலேயே உள்ளனர்.

அவர்களுக்கு அங்கு உணவு உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படுகிறது. டெல்லி சென்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டாலும் காவல் துறையின் மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள்.

தலைமைச் செயலாளர் பேட்டி.

இவர்கள் மூலம்தான் கரோனா தொற்று அதிகளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் தனிமையில் ஒழுங்காக இல்லாவிட்டால் மருத்துவமனையின் கண்காணிப்பிற்கு மாற்றப்படுவார்கள்.

நோயின் தாக்கத்தை உணர்ந்து காவல் துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களே நோயின் தீவிரத்தை உணர்ந்து வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் சம்பளத்தை குறைக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மாடுகளுக்கு உணவாக மாறிய மல்லிகைப் பூ செடிகள்

Last Updated : Apr 1, 2020, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.