ETV Bharat / state

சென்னையில் 30 முதல் 39 வயதினரை அதிக அளவில் பாதிக்கும் கரோனா!

author img

By

Published : Dec 19, 2020, 2:20 PM IST

சென்னையில் 30 முதல் 39 வயது உடையவர்கள் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

Corona affects more than 30 to 39 year olds in Chennai  சென்னை கரோனா செய்திகள்  சென்னை மாநகராட்சி கரோனா நிலவரம்  சென்னை மாவட்டச் செய்திகள்  Chennai Corona News  Chennai Corona Update News  Corona status of Chennai Corporation
Corona affects more than 30 to 39 year olds in Chennai

அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துவருகிறது. இருப்பினும் தினமும் 500-க்கு கீழ் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலை மேலும் குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடத்துவது, மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

30 முதல் 39 வயதினரை தாக்கும் கரோனா

கடந்த வாரம் வரையிலும் 50 முதல் 59 வயதுடையவர்கள் அதிகமாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த திங்கள் முதல் உயர்ந்து, தற்போது 30 முதல் 39 வயது உடையவர்கள் 19.4 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மண்டலவாரி நிலைப் பட்டியல்

அண்ணா நகர் - 24 ஆயிரத்து 378 பேர்

கோடம்பாக்கம் - 23 ஆயிரத்து 888 பேர்

தேனாம்பேட்டை - 21 ஆயிரத்து 234 பேர்

ராயபுரம் - 19 ஆயிரத்து 488 பேர்

தண்டையார்பேட்டை - 17 ஆயிரத்து 28 பேர்

திரு.வி.க. நகர் - 17 ஆயிரத்து 661 பேர்

அடையாறு - 17 ஆயிரத்து 887 பேர்

வளசரவாக்கம் - 14 ஆயிரத்து 30 பேர்

அம்பத்தூர் - 15 ஆயிரத்து 693 பேர்

ஆலந்தூர் - ஒன்பதாயிரத்து 88 பேர்

மாதவரம் - எட்டாயிரத்து 26 பேர்

பெருங்குடி - எட்டாயிரத்து 166 பேர்

திருவொற்றியூர் - ஆறாயிரத்து 729 பேர்

சோழிங்கநல்லூர் - ஐந்தாயிரத்து 885 பேர்

மணலி - மூன்றாயிரத்து 523 பேர்

அதன்படி, இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 587 பேர் இந்தக் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 612 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள மூன்றாயிரத்து 37பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 938 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை கரோனா விகிதம்: மாநகராட்சி அறிவிப்பு

அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துவருகிறது. இருப்பினும் தினமும் 500-க்கு கீழ் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பரவலை மேலும் குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடத்துவது, மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

30 முதல் 39 வயதினரை தாக்கும் கரோனா

கடந்த வாரம் வரையிலும் 50 முதல் 59 வயதுடையவர்கள் அதிகமாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த திங்கள் முதல் உயர்ந்து, தற்போது 30 முதல் 39 வயது உடையவர்கள் 19.4 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மண்டலவாரி நிலைப் பட்டியல்

அண்ணா நகர் - 24 ஆயிரத்து 378 பேர்

கோடம்பாக்கம் - 23 ஆயிரத்து 888 பேர்

தேனாம்பேட்டை - 21 ஆயிரத்து 234 பேர்

ராயபுரம் - 19 ஆயிரத்து 488 பேர்

தண்டையார்பேட்டை - 17 ஆயிரத்து 28 பேர்

திரு.வி.க. நகர் - 17 ஆயிரத்து 661 பேர்

அடையாறு - 17 ஆயிரத்து 887 பேர்

வளசரவாக்கம் - 14 ஆயிரத்து 30 பேர்

அம்பத்தூர் - 15 ஆயிரத்து 693 பேர்

ஆலந்தூர் - ஒன்பதாயிரத்து 88 பேர்

மாதவரம் - எட்டாயிரத்து 26 பேர்

பெருங்குடி - எட்டாயிரத்து 166 பேர்

திருவொற்றியூர் - ஆறாயிரத்து 729 பேர்

சோழிங்கநல்லூர் - ஐந்தாயிரத்து 885 பேர்

மணலி - மூன்றாயிரத்து 523 பேர்

அதன்படி, இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 587 பேர் இந்தக் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 612 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள மூன்றாயிரத்து 37பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 938 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை கரோனா விகிதம்: மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.