ETV Bharat / state

கரோனாவை வென்று பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு சிறப்பு வரவேற்பு!

author img

By

Published : Jul 9, 2020, 1:17 AM IST

கரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களை பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் சால்வை அணிவித்து பூங்கொத்து அளித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

கரோனாவை வென்ற காவலர்கள்
கரோனாவை வென்ற காவலர்கள்

சென்னை புறநகரில் பணிபுரிந்து வரும் காவலர்கள் நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமால், தலைமை காவலர் பரந்தாமன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருபது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர்கள் தற்போது குணமாகி வீடு திரும்புயுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை8) பணிக்கு திரும்பிய அவர்களை வரவேற்பதற்காக ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் அவர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரித்து, மலர்தூவி, மேளத்தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரோனாவை வென்று பணிக்கு திரும்பிய காவலர்களை வரவேற்கும் காட்சி

அதன் பின்னர் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர், “அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், இதனால் நாம் நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும்” என அறிவுரை கூறினார்.

அதன் பின்னர் குணமடைந்த காவலர்கள் கூறுகையில்,” தமிழ்நாடு அரசு கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் கரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: சென்னையை மிஞ்சிய சேலம்

சென்னை புறநகரில் பணிபுரிந்து வரும் காவலர்கள் நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திருமால், தலைமை காவலர் பரந்தாமன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருபது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர்கள் தற்போது குணமாகி வீடு திரும்புயுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை8) பணிக்கு திரும்பிய அவர்களை வரவேற்பதற்காக ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் அவர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பளம் விரித்து, மலர்தூவி, மேளத்தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரோனாவை வென்று பணிக்கு திரும்பிய காவலர்களை வரவேற்கும் காட்சி

அதன் பின்னர் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர், “அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், இதனால் நாம் நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியும்” என அறிவுரை கூறினார்.

அதன் பின்னர் குணமடைந்த காவலர்கள் கூறுகையில்,” தமிழ்நாடு அரசு கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்தால் கரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: சென்னையை மிஞ்சிய சேலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.