ETV Bharat / state

விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் செயல் தலைவர் கைப்பையில்  தோட்டாக்கள்!

author img

By

Published : Nov 11, 2020, 10:43 AM IST

Updated : Nov 11, 2020, 12:20 PM IST

சென்னை : விமான நிலையம் வந்த காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் கைப்பையில் 17 தோட்டாக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Congress executive mayura jayakumar hold a bullet in his handbag
Congress executive mayura jayakumar hold a bullet in his handbag

தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கோவைக்கு செல்ல காத்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த பயணிகளின் உடைமைகளை மத்தியத் தொழிற்படை காவல் துறையினர் சோதனையிட்டபோது, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் கைப்பையில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவரது கைப்பையில் சோதனை செய்தபோது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸை வைத்திருப்பதாகவும், கைப்பையில் தோட்டா இருப்பது தெரியாமல் தன் பையை விமான நிலையம் கொண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது விமானப் பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய காவல் துறையினரிடம் தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. மயூரா ஜெயக்குமாரிடம் துப்பாக்கிக்கான ஆவணங்கள் கோரப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: விமான பயணியிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டா!

தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கோவைக்கு செல்ல காத்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த பயணிகளின் உடைமைகளை மத்தியத் தொழிற்படை காவல் துறையினர் சோதனையிட்டபோது, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் கைப்பையில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவரது கைப்பையில் சோதனை செய்தபோது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸை வைத்திருப்பதாகவும், கைப்பையில் தோட்டா இருப்பது தெரியாமல் தன் பையை விமான நிலையம் கொண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது விமானப் பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய காவல் துறையினரிடம் தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. மயூரா ஜெயக்குமாரிடம் துப்பாக்கிக்கான ஆவணங்கள் கோரப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: விமான பயணியிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டா!

Last Updated : Nov 11, 2020, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.