ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு!

author img

By

Published : May 10, 2021, 9:43 PM IST

சென்னை : கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையராக நேற்று (மே.9) பொறுப்பேற்றுக் கொண்ட ககன்தீப் சிங் பேடி, ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆய்வு!
சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆய்வு!

சென்னையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வீடு, வீடாக சென்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா தனிமைப்படுத்தல் மையங்கள், வார்டு தோறும் சிகிச்சை மையங்களையும் மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.9) சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்தார்.

மேலும் இன்று (மே.10) வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்யும் தற்காலிக மாநகராட்சி ஊழியர்களிடம் அவர் கலந்துரையாடினார். கரோனா பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்து மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் ஆல் பில் ஜான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!

சென்னையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வீடு, வீடாக சென்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா தனிமைப்படுத்தல் மையங்கள், வார்டு தோறும் சிகிச்சை மையங்களையும் மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.9) சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்தார்.

மேலும் இன்று (மே.10) வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்யும் தற்காலிக மாநகராட்சி ஊழியர்களிடம் அவர் கலந்துரையாடினார். கரோனா பாதுகாப்பு மையங்களையும் ஆய்வு செய்து மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் ஆல் பில் ஜான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.