ETV Bharat / state

சென்னை பிரபல துணிக்கடையில் தனியார் கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம் - சென்னை சரவணா ஸ்டோர்ஸ்

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோரில் பொருட்கள் வாங்க சென்ற தனியார் கல்லூரி பேராசிரியர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழப்பு
தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழப்பு
author img

By

Published : May 9, 2022, 10:19 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோபிநாத் (வயது-44).இவர் மனைவியுடன் குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் கோபிநாத்தை பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற குரோம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு

சென்னை: தாம்பரம் அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோபிநாத் (வயது-44).இவர் மனைவியுடன் குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் செவிலியர்கள் கோபிநாத்தை பரிசோதனை செய்ததில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற குரோம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.