ETV Bharat / state

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: சென்னையின் முக்கியச் சாலைகள் மூடல்

author img

By

Published : Nov 25, 2020, 6:02 PM IST

சென்னை: தலைநகர் சென்னையின் முக்கியச் சாலைகளில் பொதுமக்கள் செல்லாதவாறு காவல் துறையினர் பேரிகார்டு வைத்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னையின் முக்கிய சாலைகள் மூடல்
சென்னையின் முக்கிய சாலைகள் மூடல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டது.

நிவர் புயல் நேற்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே இன்று (நவ.25) மாலை தீவிரப் புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் முக்கியச் சாலைகள் மூடல்

சென்னையில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றிவருகின்றனர். இதனால் போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையின் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, ஈசிஆர், ஓஎம்ஆர், எண்ணூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் பேரிகார்டு வைத்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தடுப்பை மீறி செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மீனவர்கள் ஆதங்கம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டது.

நிவர் புயல் நேற்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே இன்று (நவ.25) மாலை தீவிரப் புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் முக்கியச் சாலைகள் மூடல்

சென்னையில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றிவருகின்றனர். இதனால் போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையின் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, ஈசிஆர், ஓஎம்ஆர், எண்ணூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் பேரிகார்டு வைத்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். தடுப்பை மீறி செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மீனவர்கள் ஆதங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.