ETV Bharat / state

Omicron variant: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

author img

By

Published : Nov 29, 2021, 10:12 PM IST

கரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களிடையே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

சென்னை: ஒமைக்ரான் உருமாறிய கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று (நவ.29) ஆய்வு செய்தார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கரோனா நோய் ஏற்படக் காரணமான வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய வைரசாகத் தோன்றுகின்றது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டு தற்போது டெல்டா வகை கரோனா வைரஸ் பிரதானமான வகையாகத் திகழ்கிறது.

26 நவம்பர் 2021-இல், உலக சுகாதார நிறுவனம், கரோனா B.1.1.529 உருமாற்றத்தை ‘ஒமைக்ரான்’ வகையாக அறிவித்தது. மேலும் ‘ஒமைக்ரான்’ வகையைக் கவலைக்குரிய உருமாற்றமாக (Variant of Concern) அறிவித்துள்ளது. கரோனா ‘ஒமைக்ரான்’ உருமாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி முதன்முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக தென் ஆப்ரிக்காவில் கோவிட் தொற்று அதிவேகமாகப் பரவுவதற்கு ‘ஒமைக்ரான்’ உருமாற்றமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வகை உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ உருமாற்றத்தால் கரோனா வைரஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மீறித் தப்பிக்கக் கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாகப் பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இத்தகைய உருமாறிய கரோனா வைரஸ்களை தமிழ்நாட்டில் தீவிரமாகக் கண்காணிக்க, பொதுச்சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாநில பொதுச் சுகாதார ஆய்வகத்தில் முழு மரபணு வரிசைப்படுத்துதல் (Whole Genomic Sequencing) கருவி செப்டம்பர் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வித்தியாசமான கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சமீபகாலங்களில் பிரதானமாக டெல்டாவகை கரோனா மட்டுமே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 95% மேல் டெல்டா வகையே கண்டறியப்பட்டுள்ளது. இது வரை ‘ஒமைக்ரான்’ உருமாறிய கரோனா தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை.
‘ஒமைக்ரான்’ வகை கரோனா, RT-PCR பரிசோதனையில் கண்டறிய இயலும். ‘ஒமைக்ரான்’ வகை கரோனா வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து தமிழ்நாட்டில் பரவாமல் இருக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச விமான நிலையங்களில், தென்ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்தும் சேர்த்து), போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக RT-PCR பரிசோதனை செய்து, நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். நெகடிவ் முடிவு வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

7 நாள்கள் வீட்டுத் தனிமையிலிருந்த பின்பு, 8ஆவது நாளில் மறுபடியும் ஆர்டிபிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வந்தபிறகு அவர்கள் அடுத்த 7 நாள்களுக்குத் தாமாக உடல்நிலையைக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பயணிகள் எவருக்கேனும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டால் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உருமாற்றம் உள்ளதா எனக் கண்டறியப்படும்.

மேலும், மேற்கூறிய 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்த 14 நாள்களுக்குள் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் (அ) 104 இலவச மருத்துவ உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 5 விழுக்காடு RT-PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, "‘ஒமைக்ரான்’ உருமாற்றம் தொடர்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ‘ஒமைக்ரான்’ உருமாறிய கரோனா தொற்றின் பாதிப்புகளைத் தடுக்க “கரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம்” என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இரண்டு தவணைகள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது வராமலும், பரவாமலும் தடுக்க தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு விமானப் பயணிகளைத் தொடர்ந்து கண்காணித்தும், RT-PCR பரிசோதனை செய்தும், 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்தல் மற்றும் சமுதாய தடுப்பூசி நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற தொடர் தடுப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டும்" என இறையன்பு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தமிழ்நாட்டிலேயே கண்டறியலாம்

சென்னை: ஒமைக்ரான் உருமாறிய கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் வராமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் இன்று (நவ.29) ஆய்வு செய்தார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கரோனா நோய் ஏற்படக் காரணமான வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய வைரசாகத் தோன்றுகின்றது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டு தற்போது டெல்டா வகை கரோனா வைரஸ் பிரதானமான வகையாகத் திகழ்கிறது.

26 நவம்பர் 2021-இல், உலக சுகாதார நிறுவனம், கரோனா B.1.1.529 உருமாற்றத்தை ‘ஒமைக்ரான்’ வகையாக அறிவித்தது. மேலும் ‘ஒமைக்ரான்’ வகையைக் கவலைக்குரிய உருமாற்றமாக (Variant of Concern) அறிவித்துள்ளது. கரோனா ‘ஒமைக்ரான்’ உருமாற்றத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி முதன்முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக தென் ஆப்ரிக்காவில் கோவிட் தொற்று அதிவேகமாகப் பரவுவதற்கு ‘ஒமைக்ரான்’ உருமாற்றமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வகை உருமாற்றம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ உருமாற்றத்தால் கரோனா வைரஸ் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மீறித் தப்பிக்கக் கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாகப் பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இத்தகைய உருமாறிய கரோனா வைரஸ்களை தமிழ்நாட்டில் தீவிரமாகக் கண்காணிக்க, பொதுச்சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாநில பொதுச் சுகாதார ஆய்வகத்தில் முழு மரபணு வரிசைப்படுத்துதல் (Whole Genomic Sequencing) கருவி செப்டம்பர் 14-ஆம் தேதி தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வித்தியாசமான கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சமீபகாலங்களில் பிரதானமாக டெல்டாவகை கரோனா மட்டுமே தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 95% மேல் டெல்டா வகையே கண்டறியப்பட்டுள்ளது. இது வரை ‘ஒமைக்ரான்’ உருமாறிய கரோனா தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை.
‘ஒமைக்ரான்’ வகை கரோனா, RT-PCR பரிசோதனையில் கண்டறிய இயலும். ‘ஒமைக்ரான்’ வகை கரோனா வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து தமிழ்நாட்டில் பரவாமல் இருக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச விமான நிலையங்களில், தென்ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்தும் சேர்த்து), போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், பங்களாதேஷ், மொரிசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக RT-PCR பரிசோதனை செய்து, நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். நெகடிவ் முடிவு வந்தவர்கள் 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

7 நாள்கள் வீட்டுத் தனிமையிலிருந்த பின்பு, 8ஆவது நாளில் மறுபடியும் ஆர்டிபிசிஆர் (RT-PCR) பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வந்தபிறகு அவர்கள் அடுத்த 7 நாள்களுக்குத் தாமாக உடல்நிலையைக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பயணிகள் எவருக்கேனும் கோவிட் தொற்று கண்டறியப்பட்டால் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உருமாற்றம் உள்ளதா எனக் கண்டறியப்படும்.

மேலும், மேற்கூறிய 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்த 14 நாள்களுக்குள் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் (அ) 104 இலவச மருத்துவ உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் 5 விழுக்காடு RT-PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, "‘ஒமைக்ரான்’ உருமாற்றம் தொடர்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ‘ஒமைக்ரான்’ உருமாறிய கரோனா தொற்றின் பாதிப்புகளைத் தடுக்க “கரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம்” என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இரண்டு தவணைகள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது வராமலும், பரவாமலும் தடுக்க தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு விமானப் பயணிகளைத் தொடர்ந்து கண்காணித்தும், RT-PCR பரிசோதனை செய்தும், 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்தல் மற்றும் சமுதாய தடுப்பூசி நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற தொடர் தடுப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டும்" என இறையன்பு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தமிழ்நாட்டிலேயே கண்டறியலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.