ETV Bharat / state

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை

author img

By

Published : Aug 24, 2020, 5:40 PM IST

சென்னை: திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி ஆணை வெளியிட்டுள்ளார்.

Chief Minister's order to open water for irrigation from Amravati dam
Chief Minister's order to open water for irrigation from Amravati dam

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக ஆக.26 முதல் 120 நாள்களுக்கு 324 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம், இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக ஆக.26 முதல் 120 நாள்களுக்கு 324 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.