சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் முன்னதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

இன்னும் சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.31) காலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.