ETV Bharat / state

கழிவுநீர் இணைப்பு பெற இனி சிரமம் இல்லை - புதிய வசதியை அறிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி - It is no longer difficult to get to the sewer line

சென்னை: மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு
விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு
author img

By

Published : Nov 30, 2019, 8:58 AM IST

சென்னையில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தலைமை செயலாளர் சண்முகம் பேசும்போது, ' கோயம்பேட்டில் 45 எம்.எல்.டி கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம், மக்கள் தொகை 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். எனவே இது போன்ற மறுசுழற்சி மையங்களை உருவாக்கி நீரை தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்' என்றார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, 'சென்னை மாநகராட்சியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரித்து நீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் பட்சத்தில்107 கோடி வருமானம் அரசிற்கு கிடைக்கும்' என்றார்.

துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 'முதல் முதலாவதாக மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நன்னீரை குறைக்க தான் இந்த திட்டம் மிக முக்கியமாக கொண்டு வரப்பட்டது' என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்மி பேசும்போது, சென்னை மாநகராட்சியில் தரை தளம், இரண்டாம் தளம் வரை உள்ள கட்டிடங்களுக்கு 45674567 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால், அல்லது இணையதளம் மூலம் பதிவு செய்தால் எந்தவித ஆவணமும் இன்றி கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். இத்திட்டம் 2019 டிசம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்..!

சென்னையில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தலைமை செயலாளர் சண்முகம் பேசும்போது, ' கோயம்பேட்டில் 45 எம்.எல்.டி கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம், மக்கள் தொகை 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். எனவே இது போன்ற மறுசுழற்சி மையங்களை உருவாக்கி நீரை தூய்மைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்' என்றார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, 'சென்னை மாநகராட்சியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரித்து நீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் பட்சத்தில்107 கோடி வருமானம் அரசிற்கு கிடைக்கும்' என்றார்.

துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 'முதல் முதலாவதாக மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நன்னீரை குறைக்க தான் இந்த திட்டம் மிக முக்கியமாக கொண்டு வரப்பட்டது' என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்மி பேசும்போது, சென்னை மாநகராட்சியில் தரை தளம், இரண்டாம் தளம் வரை உள்ள கட்டிடங்களுக்கு 45674567 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால், அல்லது இணையதளம் மூலம் பதிவு செய்தால் எந்தவித ஆவணமும் இன்றி கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். இத்திட்டம் 2019 டிசம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்..!

Intro:Body:https://we.tl/t-n07Qsahqoi

*கழிவுநீர் இணைப்பு பெற இனி சிரமம் இல்லை - புதிய வசதியை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!*
______
சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர், இருங்காட்டு கோட்டை, ஸ்ரீ பெரும்பதூர், ஒரகடம் பகுதியில் உள்ள 691 தொழிற்சாலைகள் பயன் பெறும்.

*தலைமை செயலாளர் சண்முகம் பேச்சு :*

சேத்துப்பட்டு, பீர்க்கங்கரனை போன்ற பல்வேறு பகுதிகளில் ஏரி,குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுத்தம் செய்து நீரை சேமிக்க தொடர்ந்து பணி செய்து வருகிறோம்.

நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை,சகாப்தத்தை ஏற்படுத்துவதே இந்த கழிவு நீர் திட்டத்தை சுத்தப்படுத்தும் திட்டம்.

இன்று கோயம்பேட்டில்
45 எம்.எல்.டி கழிவு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்,மக்கள் தொகை இன்னும் 10 ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும்,
எனவே இது போன்ற மறுசுழற்சி மையங்களை உருவாக்கி நீரை தூய்மை படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

*உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு :*

மக்களுக்கு தேவைதான எளிமையான முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.

சென்னை மாநகராட்சியை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரித்து நீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

சிப்காட் தொழிற்சாலைகள் மற்றும் ஹுண்டாய் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் பட்சத்தில்
107 கோடி வருமானம் அரசிற்கு கிடைக்கும்.

திடீர் என்று முதல்வர் வந்துவிடார் என்கிறார்கள்.
எம்.ஜி ஆர் இருந்த காலம் முதல் பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து வருபவர்.

ஒரு சாமானியன் எப்படி முதல்வர் ஆக வேண்டும் என்பதற்கு எடப்பாடி கே.பழனிச்சாமி மட்டுமே உதாரணம்.
முதல்வர் பதவியை அவர் விரும்பவில்லை, அது அவருக்கு தானாக கிடைத்தது.

ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கி உள்ளோம் இது எத்தனை பெரிய சாதனை.

சுய உதவித் குழு திட்டத்தில் மிக சிறப்பாக இந்தியாவிலேயே 60 ஆயிரம் கோடி கடன் கொடுத்து உள்ளொம்.

சாமானிய,விவசாய முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமியும் அவருக்கு உறுதுணையாக ஓ.பி.எஸ் அவர்களும் உள்ளனர்.

*துனை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு :*

வீராணம் திட்டத்தை திமுக செயல்படுத்த முயன்று நிறுத்தியது அதற்கு பின்னர் அதை சிறப்பாக செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

முதல் முதலாவதாக மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்,

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நன்னீரை குறைக்க தான் இந்த திட்டம் மிக முக்கியமாக கொண்டு வரப்பட்டது.

*முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு :*

நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறு சுழற்சி செய்யும் மாநிலம் - தமிழ்நாடு என்ற பெருமை உண்டு.

(குறுகிய காலத்தில் அதிக சிறப்பான பணிகளை செய்த பணியாளர் குறித்த குட்டிக்கதை சொன்னார்)

பதவி ஏற்ற மூன்று ஆண்டில், 30 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்துள்ளேன்.

*கழிவு நீர் இணைப்பு பெற புதிய அறிவிப்பு - முதல்வர் அறிவித்தார்*

சென்னை மாநகராட்சியில்
தரை தளம், இரண்டாம் தளம் வரை உள்ள கட்டிடங்களுக்கு 45674567 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால், அல்லது இணையதளம் மூலம் பதிவு செய்தால் எந்தவித ஆவணமும் இன்றி கழிவுநீர் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்.

இல்லம் தோறும் இணைப்பு - கழிவுநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் வாரியம் தாமாக கழிவுநீர் இணைப்பு வழங்கும்.

இணைப்பு வழங்கிய பிறகு ஒரே தவணையாகவோ அல்லது 5 வருடத்திற்குள் 10 தவணையாகவோ செலுத்தலாம்.

இத்திட்டம் 2019 டிசம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும்.

(ஏற்கனவே, கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே, ஆவணங்களையும், முழு கட்டணத்தையும் செலுத்திய பின்னர், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை குடிநீர் & கழிவுநீர் அகற்ற வாரியம், காவல்துறை உள்ளிட்ட துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே இணைப்பு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது)

பின்னர், நடந்து சென்று கழிவுநீர் மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்தார். உடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
அப்போது, இந்த மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அமைச்சர் வேலுமணி குடித்து காண்பித்தார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.