ETV Bharat / state

'விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் உரிய ஆவணங்களுடன் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லலாம்' - சத்ய பிரத சாகு தகவல்!

author img

By

Published : Sep 23, 2019, 3:23 PM IST

Updated : Sep 23, 2019, 3:59 PM IST

சென்னை: 'விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசுப் பொருட்கள் கொண்டு செல்பவர்கள், உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்' என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

சத்ய பிரத சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டபேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்; விழுப்புரம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தார். மேலும் அவர் வரும் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்பவர்கள், உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம். ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இரண்டு தொகுதிகளிலும் தலா மூன்று பறக்கும் படையினரும், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபவர். தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டியில் மொத்தம் 275 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அதேபோல் நாங்குநேரியில் 299 வாக்குசாவடிகளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டபேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்; விழுப்புரம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தார். மேலும் அவர் வரும் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்பவர்கள், உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம். ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இரண்டு தொகுதிகளிலும் தலா மூன்று பறக்கும் படையினரும், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபவர். தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டியில் மொத்தம் 275 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அதேபோல் நாங்குநேரியில் 299 வாக்குசாவடிகளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்க:

'விக்கிரவாண்டியோ வாங்குறவாண்டியோ... எங்களை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது!'

வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுமா திமுக? நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி ஒரு பார்வை

Intro:Body:*இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் உரிய ஆவணங்களுடன் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகூ தெரிவித்துள்ளார்.*


சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டபேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தாயர் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாவும் சாகு கூறினார். தீபாவளி அக்டோபர் 27 ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பரிசு பொருட்கள் கொண்டு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

செலவின பார்வையாளர்கள், துணை ராணுவ படையினர் தொகுதிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினரும், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபவர். மேலும், தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும் என்று சத்ய பிரதசாகூ தெரிவித்தார்.


விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் செப்டம்பர் 21 ம் தேதி வரையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் இருக்கிறார். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 721 பேரும், பெண்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 710 பேரும் உள்ளனர். இதே போல நாங்குநேரியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 341 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 698 பேர் உள்ளனர்.


விக்கிரவாண்டியில் 139 இடங்களில் 275 வாக்குவாசவடிகளும், நாங்குநேரியில் 170 இடங்களில் 299 வாக்குசாவடிகளும் அமைக்கப்படவுள்ளது.
Conclusion:
Last Updated : Sep 23, 2019, 3:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.