ETV Bharat / state

பிரபல மதுபானக் கடை கொள்ளையன் கைது - 14 லட்சம் பறிமுதல்..! - டாஸ்மார்க் திருடன் கைது

சென்னை: மதுபானக் கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்து 14 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Tasmac robber Arrest Chennai robber Arrest டாஸ்மார்க் திருட்டு சென்னை டாஸ்மார்க் திருட்டு டாஸ்மார்க் திருடன் கைது சென்னை டாஸ்மார்க் திருடன் கைது
Chennai robber Arrest
author img

By

Published : Mar 7, 2020, 4:51 PM IST

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுபானக் கடையின் மேலாளர் சங்கர் கணேஷ் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் சென்ட்ரல், வேலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தேடியுள்ளனர்.

ஆட்டோவில் செல்லும் கொள்ளையன் சிசிடிவி காட்சி

இந்நிலையில், வேலூர் கரும்பத்தூர் பகுதியில் மறைந்திருந்த சிவா (எ) குபேரன் (44) என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குபேரன் தனியாக கடையின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும், அடையார், திருவான்மியூர், தரமணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 14 லட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி, கத்தி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:அண்ணாவின் 'பேராசிரியர் தம்பி' மறைவு: இறுதி நிகழ்வுகள்...

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுபானக் கடையின் மேலாளர் சங்கர் கணேஷ் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் சென்ட்ரல், வேலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தேடியுள்ளனர்.

ஆட்டோவில் செல்லும் கொள்ளையன் சிசிடிவி காட்சி

இந்நிலையில், வேலூர் கரும்பத்தூர் பகுதியில் மறைந்திருந்த சிவா (எ) குபேரன் (44) என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குபேரன் தனியாக கடையின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும், அடையார், திருவான்மியூர், தரமணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 14 லட்சம் ரூபாய் பணம், கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி, கத்தி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:அண்ணாவின் 'பேராசிரியர் தம்பி' மறைவு: இறுதி நிகழ்வுகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.