ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல் : 6.78 லட்சம் வாகனங்கள் பறிமுதல்!

author img

By

Published : Aug 12, 2020, 5:52 PM IST

சென்னை : ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 141 நாள்களில் ஒன்பது லட்சத்து 60 ஆயிரத்து 38 பேரை காவல் துறையினர் கைதுசெய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

seized vehicles
Chennai police

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 141 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 60 ஆயிரத்து 38 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. அதேபோல் ஆறு லட்சத்து 78 ஆயிரத்து 326 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 20 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று (ஆக. 11) ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிலவரம்: சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைவு

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 141 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 60 ஆயிரத்து 38 பேரை காவல் துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. அதேபோல் ஆறு லட்சத்து 78 ஆயிரத்து 326 வாகனங்களைப் பறிமுதல் செய்து, 20 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று (ஆக. 11) ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிலவரம்: சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.