சென்னை மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் கழிவுநீர் இணைப்பு பெற்றிட 'அழைத்தால் இணைப்பு', 'இல்லந்தோறும் இணைப்பு' என்ற இரண்டு புதிய திட்டங்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜி+1, ஜி+3, ஸ்டில்ட் + 3 ஆகிய தளம் வரையுள்ள கட்டடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு பெற, 044-45674567 என்ற தொலைபேசி மூலமாகவோ, சென்னை குடிநீர் வாரிய இணையதளம் மூலமாகவோ நேரிலோ பதிவு செய்தவுடன் எவ்வித ஆவணங்களுமின்றி எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.
இத்திட்டங்கள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை முழுமையாக அல்லது தவணை முறையில் எளிதாகச் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களினால், 15 நாள்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும், இணைப்புகள் கொடுத்த 24 மணி நேரத்தில் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொந்தக் கட்சி கவுன்சிலரையே கடத்த முயன்ற அதிமுகவினர்!