ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்பு

author img

By

Published : Feb 19, 2023, 3:24 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(பிப்.19) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.20ஆம் தேதி முதல் பிப்.23ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை எனவும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 35.6 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 34.6 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. குறைந்த வெப்பநிலையாக கொடைக்கானலில் 18.7 டிகிரி செல்சியஸ், குன்னாரில் 21.5 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 22.4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

வறண்ட வானிலை குறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மையம், "இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கிராமத்திற்குள் நுழைந்து கால்நடையை வேட்டையாடும் புலி; தீவிர கண்காணிப்பில் தமிழக - கர்நாடக வனத்துறை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(பிப்.19) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.20ஆம் தேதி முதல் பிப்.23ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை எனவும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 35.6 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 34.6 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. குறைந்த வெப்பநிலையாக கொடைக்கானலில் 18.7 டிகிரி செல்சியஸ், குன்னாரில் 21.5 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 22.4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

வறண்ட வானிலை குறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மையம், "இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கிராமத்திற்குள் நுழைந்து கால்நடையை வேட்டையாடும் புலி; தீவிர கண்காணிப்பில் தமிழக - கர்நாடக வனத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.