ETV Bharat / state

ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம்: மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

author img

By

Published : Jul 5, 2021, 2:35 PM IST

ஐஐடி ஒன்றிய அரசின் நிறுவனம் என இருந்து விடாமல், மாநில அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சென்னை ஐஐடியில் தொடரும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம்
ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம்

சென்னை: ஐஐடியில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகக் கூறி உதவி பேராசிரியர் விபின் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாகவே ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஐஐடி உயர்கல்வி நிறுவனமா அல்லது உயர் சாதி நிறுவனமா எனக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இன்று (ஜீலை.05) மத்திய கைலாஷ் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம் - மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் கூறியதாவது, "சென்னை ஐஐடியில் முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இதர பிரிவினருக்கு வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படுகிறது. உதவி பேராசிரியர் விபின், பேராசிரியர் வசந்தா கந்தசாமி, பாத்திமா லத்தீப் உள்ளிட்ட பலர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஐஐடிகளில் இட ஒதுக்கிடு பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு ஆண்டிற்கு ஆயிரம் இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும் சென்னை ஐஐடியில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைக்கு, மாநில அரசு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றிய அரசின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு இருந்து விடக்கூடாது.

தற்போது இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஒன்றிய அரசு அவரது பதவியை ஒருபோதும் நீட்டிக்கக் கூடாது" எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி தற்கொலைகள், சாதிய பாகுபாடு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை: ஐஐடியில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகக் கூறி உதவி பேராசிரியர் விபின் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாகவே ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஐஐடி உயர்கல்வி நிறுவனமா அல்லது உயர் சாதி நிறுவனமா எனக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இன்று (ஜீலை.05) மத்திய கைலாஷ் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம் - மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் கூறியதாவது, "சென்னை ஐஐடியில் முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இதர பிரிவினருக்கு வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்படுகிறது. உதவி பேராசிரியர் விபின், பேராசிரியர் வசந்தா கந்தசாமி, பாத்திமா லத்தீப் உள்ளிட்ட பலர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஐஐடிகளில் இட ஒதுக்கிடு பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு ஆண்டிற்கு ஆயிரம் இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும் சென்னை ஐஐடியில் நடைபெற்ற சாதிய வன்கொடுமைக்கு, மாநில அரசு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒன்றிய அரசின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு இருந்து விடக்கூடாது.

தற்போது இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஒன்றிய அரசு அவரது பதவியை ஒருபோதும் நீட்டிக்கக் கூடாது" எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி தற்கொலைகள், சாதிய பாகுபாடு விவகாரம்: விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.