ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்!

author img

By

Published : May 26, 2023, 9:05 PM IST

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றார். பின்னர், மூத்த நீதிபதியான டி. ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி. ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ். வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி கங்காபூர்வாலா :

கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். மூத்த வழக்கறிஞர் எஸ்.என். லோயாவுடன் இணைந்து வழக்குகளில் வாதாடினார். உரிமையயில் வழக்குகளில் திறமை வாய்ந்த இவர் பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார்.

புல்வெளி டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் விளையாடியுள்ளார். கூடைப்பந்து போட்டியிலும் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். தனியார் கல்லூரியில் 1991 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக நியமிக்கப்படும் வரை சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த வந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கலாம்.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றார். பின்னர், மூத்த நீதிபதியான டி. ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி. ராஜா கடந்த 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ். வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி கங்காபூர்வாலா :

கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். மூத்த வழக்கறிஞர் எஸ்.என். லோயாவுடன் இணைந்து வழக்குகளில் வாதாடினார். உரிமையயில் வழக்குகளில் திறமை வாய்ந்த இவர் பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார்.

புல்வெளி டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் விளையாடியுள்ளார். கூடைப்பந்து போட்டியிலும் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். தனியார் கல்லூரியில் 1991 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக நியமிக்கப்படும் வரை சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த வந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி நீதிபதி கங்காபூர்வாலா ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு பாஸ்போர்ட் வழங்கலாம்.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.